கேள்வி எண் 91 - சட்டக்கேள்விகள் 100
91. விபத்தில் இறந்த நபர், மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகையாக ரூ. 5000 மட்டுமே பெறமுடியும் என்கின்றனர். இது சரியா?
குடிகாரர் ஒருவர் ஓட்டிவந்த லாரியில் அடிபட்டு இரண்டு மாத்திற்கு முன்பு என்னுடைய சகோதரி இறந்து விட்டாள். முதலில் மருத்துவ செலவிலிருந்து ஐந்து மடங்கு நிவாரணமாக பெற்றுத்தருகிறேன் என்று கூறிய என்னுடைய வழக்குரைஞர் தற்போது பின்வாங்குகிறார். வெறும் 5000 மட்டுமே வாங்கமுடியும் என்கிறார், ஏன் என்று கேட்டதற்கு மூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) என்பதால் அவ்வளவு வாங்க முடியாது என்கிறார். இதற்கு என்னதான் வழி?
- I. தீபா, கோவை
பதில் :
முதலில் நீங்கள் காப்பீட்டு பத்திரத்தில் கம்பெனி விதிமுறைகளை(Terms and Conditions) பார்க்கவேண்டும்.
உங்களுடைய சகோதரி நிவாரணம் பெறுவது உறுதி, பொதுவாக மூன்றாம் நபர் காப்பீடானது, குடித்துவிட்டு ஓட்டியதனால் விளையும் இழப்புக்கு நிவாரணம் அளிப்பதாக விதிமுறையில் கூறியிருக்க மாட்டார்கள். இருப்பினும் நீதிமன்றம் உங்களுக்கு வாகன உரிமையாளரிடமிருந்து நிவாரணம் பெற ஆவன செய்யும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவரைப் பொறுத்தவரை, எவர் ஒருவரேனும் மது 116 று சட்டக்கேள்விகள் 100 (பாகம் - 1) அருந்திவிட்டோ அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்களை உட்கொண்டோ வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அவருக்கு முதல் தடவையாக இருப்பின் ஆறு மாதம் வரை சிறை தண்டனை அளிக்கமுடியும்.
மேலும் வாகன உரிமையாளரிடமிருந்து நீங்கள் பெறும் நிவாரணத் தொகையில் நீங்கள் திருப்தி அடையாதபட்சத்தில், அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நபர், நிவாரணம், நீங்கள், மூன்றாம், குடித்துவிட்டு, உரிமையாளரிடமிருந்து, வாகனம், வாகன, என்கிறார், மட்டுமே, என்னுடைய, சகோதரி, முதலில்