கேள்வி எண் 85 - சட்டக்கேள்விகள் 100
85. 16 வயதில் கட்டாயப்படுத்தி செய்துவைத்த திருமணத்திலிருந்து விடுபட சட்டத்தில் இடம் உள்ளதா?
வணக்கம் சார், சில நாட்களுக்கு முன்பு என்னுடைய தோழியை அவரது தந்தையார் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார், என்தோழிக்கு வயது 16 தான் ஆகிறது, ஆகையால் இந்த திருமணம் செல்லத்தக்கதுதானா? கட்டாயத்தின் பெயரிலேயே இந்த திருமணத்தை நடத்தி யுள்ளனர், இதிலிருந்து விடுபட சட்டத்தில் இடம் இருக்கிறதா? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக் கிறேன். நன்றி
- D. சித்ரா, கருங்குழி
பதில் :
இந்து திருமணச்சட்டப்படி திருமணம் மேற்கொள்ள மண மகனுக்கு 21 வயதும் மணமகளுக்கு 18 வயதும் பூர்த்தியாகி இருக்கவேண்டும் என்பது விதி.
இந்த விதிக்குப் புறம்பாக ஒருவேளை திருமணம் நடந்து விட்டால் திருமணம் சட்டப்படி செல்லத்தகாமல் போய் விடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் 16 வயதான ஒரு பெண்ணிற்கு நீங்கள் கூறியது போல் திருமணம் செய்ய நேரிட்டால், “அந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. ஆகவே எனக்கு விவாகரத்து வேண்டும்“ என்று கேட்க சட்டத்தில் இடமுண்டு. தவிரவும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக திருமணத்தை நடத்துகின்றவர்களும், அதற்கு உடந்தையாக இருக்கின்றவர்களும் 18-ஆவது விதிமுறைப்படி 15நாள் சிறைவாசத்திற்கோ அல்லது ரூபாய் 1000 வரை அபராதத்திற்கோ அல்லது இரண்டு தண்டனைகளுக்குமோ உள்ளாவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், சட்டத்தில், எனக்கு, அல்லது, புறம்பாக, திருமணத்தை, இடம், விடுபட, வயதும்