கேள்வி எண் 83 - சட்டக்கேள்விகள் 100
83. விவாகரத்து பெறாமல் என் கணவர் 2 ஆவது திருமணம் செய்யப்போவதாக கூறுகிறார். அதற்கு தடைஉத்தரவு வாங்க முடியுமா?
ஐயா, என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி, எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், சமீபத்தில் சிறிய குடும்ப சச்சரவு காரணமாக நான்கு மாதங்களாக நான் என் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன், தற்போது என் கணவர் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக எனது குடும்பத்தார் முன்னிலையில் பேசி வருகிறார் அந்த திருமணத்தை தடுப்பதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க சட்டத்தில் வாய்ப்புண்டா? சற்று விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்
- B. தாட்சாயணி, திருநெல்வேலி
பதில் :
நிச்சயமாக தடை உத்தரவு வாங்க முடியும், அதே நேரத்தில் அதற்காக வழக்காடவும் செய்யலாம், ஏ.ஐ.ஆர் 1967 - பாட்னா 220- உமாசங்கர் எதிர் ராஜதேவி வழக்கில் தீர்ப்பில் தடை உத்தரவு வாங்கலாம் என்றும். அதே போன்று அதற்காக வழக்காடலாம் என்று ஏ.ஐ.ஆர் 1964 - மைசூர் 247-சங்கரப்பா எதிர் பாசம்மா தீர்ப்பிலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வாங்க, உத்தரவு, அதற்காக, எதிர், திருநெல்வேலி, திருமணம், கணவர்