கேள்வி எண் 81 - சட்டக்கேள்விகள் 100
81. நான் ஒரு NRI. இந்தியாவில் உள்ள என் சொத்தினை விற்க சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும்?
ஐயா, நான் சவுதி அரேபியாவில் வசிக்கும் ஒரு NRI,இந்தியாவிலுள்ள எனது சொத்தினை விற்பனை செய்ய விரும்புகிறேன். என்னுடைய சொத்தினை விற்பனை செய்ய நான் ஒரு பொது அதிகார பத்திரத்தினை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி அதை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையாக அனுமதி பெற்று அளித்தால் போதுமானதா? இல்லையென்றால் அதற்கான முறையான வழியினை தயவு செய்து தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- K. சவுடப்பா, ரியாத்
பதில் :
பொதுவாக சொத்து பரிமாற்றம் என்பது, வாங்குபவர் மற்றும் விற்பவர் இவர்களின் நேரடி தொடர்பால் செயல் படுத்தப்படும் ஆவணமாகும்.
உங்கள் இருவருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் உங்கள் குடும்ப உறுப்பினர் யாரையாவது அந்த ஒப்பந்தப் பத்திரத்தை உங்களுக்கு கூரியரில் அனுப்பச் செய்து அதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொது அதிகார முகவரை நியமிக்கும் போது, ரூ.100க்கான பத்திரத்தில் (Non Justicial Stamp Papers) ஆவணத்தை டைப் , பின்னர் அதை உங்களுக்கு அனுப்பி, நீங்கள் முறையாக அதற்கான ஒப்பமிட்டவுடன் அவற்றை உங்கள் முகவர், வட்டாட்சியர் அலுவலகத்திலோ/மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலோ முறையாக உங்களுக்கான பத்திரப்பதிவு வேலைகளை மேற்கொள்ள முடியும் .
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, முறையாக, செய்ய, சொத்தினை, உங்கள், நான், நீங்கள், அலுவலகத்திலோ, செய்து, உங்களுக்கு, அதிகார, உள்ள, விற்பனை, பொது, அதற்கான