கேள்வி எண் 8 - சட்டக்கேள்விகள் 100
8. என் தாத்தா எனக்கு உயில் எழுதிய சொத்தை விற்கும் அதிகாரம் எனது தந்தைக்கு உண்டா? 1983-ல் எனது தாத்தா சுயசொத்தினை (மைனர்) எனக்கு ரிஜிஸ்டர் உயில் எழுதிய பிறகு அதை தாத்தாவின் மகன் (எனக்கு அப்பா), விற்க அதிகாரம் உண்டா?
- M.சின்னையா, திருப்பூர்.
பதில் :
உங்கள் தாத்தா மைனரான உங்களுக்கு ஒரு சொத்தினை உயில் மூலம் எழுதி வைத்துள்ளார். அது தான் அவரது கடைசி உயில் எனில் அந்த சொத்துக்கு உரிமைதாரர் நீங்கள் தான். அதனை விற்க உங்கள் தந்தைக்கு உரிமை கிடையாது.
நீங்கள் அந்த சொத்தை விற்கவேண்டும் எனில் அந்த சொத்து (சென்னை, திருச்சி, மதுரை போன்ற) கார்ப்பரேஷன் லிமிட்டில் இருந்தால் அதனை முதலில் ப்ரோபேட் செய்ய வேண்டும்.
அதாவது நீதிமன்றத்தில் உயிலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உயில்படி சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் ஆவணம்தான் “ப்ரோபேட்” எனப்படும். அதுதான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுயநினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்திபடுத்திக் கொண்டபின் நீதிமன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபிதான் இது. இந்த ப்ரோபேட் வைத்துதான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளவேண்டும்.
ஏற்கனவே சொன்னதுபோல் உங்கள் சொத்து மாநகராட்சி எல்லைக்குள் (கார்ப்பரேஷன் லிமிட்டில்) இருந்தால் மட்டுமே ப்ரோபேட் செய்வது அவசியமாகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உயில், உங்கள், தாத்தா, நீங்கள், அந்த, ப்ரோபேட், எனக்கு, அறிவிக்கும், சொத்து, சொத்துக்களை, கார்ப்பரேஷன், இருந்தால், லிமிட்டில், வேண்டும், தான், அதிகாரம், சொத்தை, எழுதிய, எனது, தந்தைக்கு, விற்க, உண்டா, எனில்