கேள்வி எண் 68 - சட்டக்கேள்விகள் 100
68. ஒலிபெருக்கி சத்தத்தால் ஏற்படும் இடையூறு களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?
வழக்குரைஞர் திருமிகு குணசேகரன் அவர்களுக்கு வணக்கம். நான் சென்னை நகரத்தின் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒரு பூங்காவிற்கு அருகில் குடியிருக்கிறேன். இங்கு அருகில் ஒரு கேளிக்கை வளாகம் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விதவிதமான விழாக்களை ஏற்பாடு செய்து பெரிய அளவில் நான்கு பக்கமும் ஒலிபெருக்கிகளை அமைத்து ஆடல், பாடல்கள் ஒலிபரப்பி அமைதியாக இருந்த இந்த சூழலையே அடியோடு மாற்றிவிட்டார்கள். ஒருநாள்கூட நிம்மதியான தூக்கம் கிடையாது. மீறி கேட்டால் கட்சிக்காரர்கள் வெள்ளை வேட்டியுடன் ரவுடிக் கூட்டம் போல் படையெடுக்கிறார்கள். தினம்தினம் நாங்கள் படும் இந்த அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலுமா? இந்த குடியிருப்பு வாசிகளின் தார்மீக உரிமையை மீட்க என்ன செய்ய வேண்டும்?
- ஏ.சர்மிளா, சென்னை
பதில் :
உங்களுடைய அமைதியான வாழ்வு என்பது உங்களின் தார்மீக உரிமையாகும், இவற்றில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. ஒலிபெருக்கிகளை வைத்து அமைதிக்கு பங்கம் விளைவிப்பது நிச்சயம் குற்றமே. கேளிக்கை மண்டபம் அமைப்பதற்கு சம்பந்தபட்ட நகராட்சியிலோ அல்லது ஊராட்சி அதிகாரியிடமோ தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாகும். தடையின்மை சான்றிதழ் வழங்கும் அதிகாரி குடியிருப்புகளுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் இருக்கிறதா என்று ஆராய்ந்த பின்னரே அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவையெல்லாம் மீறப்பட்டிருக்கும்பட்சத்தில் நீங்கள் காவல்துறையையோ அல்லது மாநகராட்சி அதிகாரிகளையோ அணுகி புகார் அளிப்பதன்மூலம் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். கரைவேட்டிக்காரர்கள் உங்களை மிரட்டுகிறார்கள் என்றால் முதல்வருக்கு உங்கள் புகார்களை அனுப்பி அந்த புகாரினை மீடியாக்களில் பதியச் செய்யுங்கள். ஒருவரை மிரட்டலாம், இருவரை மிரட்டலாம், எல்லோ ரையும், எல்லோராலும் மிரட்ட முடியாது. புரிந்திருக்கும் என நினைக்கிறேன். குடியிருப்பு படையினை திரட்டுங்கள். உங்களுக்கான உரிமைய மீட்டெடுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, சான்றிதழ், வைக்க, வேண்டும், தார்மீக, பங்கம், தடையின்மை, மிரட்டலாம், குடியிருப்பு, அல்லது, கிடையாது, சென்னை, அவர்களுக்கு, குடியிருப்புகளுக்கு, அருகில், ஒலிபெருக்கிகளை, கேளிக்கை, முற்றுப்புள்ளி