கேள்வி எண் 65 - சட்டக்கேள்விகள் 100
65. கணவரின் வீட்டை 2ஆவது மனைவியாகிய என்பேரில் எழுதியபிறகு, முதல் மனைவியின் வாரிசுகளுக்கு உரிமை உண்டா?
நான் லாயர்ஸ் லைன் இதழின் தீவிர விசுவாசி. என் கணவருக்கு நான் இரண்டாம்தாரம்,அவர் பெயரிலுள்ள வீட்டினை 2 ஆம்தாரமாகிய என் மீது எழுதினால் அவருடைய மூத்த தாரத்து பெண் குழந்தைகளுக்கு சொத்துரிமை உண்டா? எனது கேள்விக்கு தயவு செய்து பதில் அளிக்கவும்..
- K.பவானி, தூத்துக்குடி
பதில் :
நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி தெளிவாக இல்லை, உங்கள் கேள்விக்குள்ளேயே நிறைய கேள்விகள் உள்ளன. இருப்பினும் இது மிக முக்கியமான விஷயமாகையால் நான் இதற்கான சில விளக்கங்களை அளிக்கிறேன்.
இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டாவது திருமணம் என்பது முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டதா? கணவரின் சொத்துக்கள் சொந்த சம்பாத்தியமா? அல்லது பரம்பரை சொத்தா? கணவர் உயிருடன் இருக்கிறாரா? Last Will எப்போது எழுதப்பட்டது? சுயநினைவுடன் எழுதப்பட்டதா?
முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணமா? எந்த ஆண்டு? இந்து திருமணச் சட்டம் 1955-ல் அமுலுக்கு வந்தது ஆகையால் 1955 ற்கு முன் திருமணம் செய்திருந்தால், இரண்டாவது திருமணம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. 1955 ற்குப் பின் என்றால் உங்கள் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படமாட்டாது. திருமணம் பதிவு செய்திருந்தாலும் சொத்துக்களில் இரண்டாவது மனைவி உரிமை கொண்டாடமுடியாது. மனைவி இறந்தபின்னர் அல்லது நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெறப்பட்ட பின் இரண்டாவது திருமணம் என்றால் அது சட்டப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.
இப்போது உங்கள் கேள்வியின்படி, நிச்சயமாக முதல் மனைவியின் வாரிசுக்கு சொத்துரிமை உண்டு. இருந்தாலும் கணவரின் சொத்து எப்படிப்பட்ட சொத்து? சொந்த உழைப்பினாலா? அல்லது பரம்பரை சொத்தா? என்ற கேள்வியும் இங்கு எழும்.
இப்படி பல கேள்விகள் இருக்கும் நிலையில் நீங்கள் ஒரு சரியான சட்ட வல்லுனரை அணுகுவதே சிறப்பானதாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், இரண்டாவது, மனைவி, அல்லது, கணவரின், இருக்கும், சட்டப்படி, உங்கள், நான், பதிவு, சொத்து, என்றால், சொந்த, பரம்பரை, பின், சொத்தா, மனைவியின், பதில், சொத்துரிமை, உண்டா, நீங்கள், கேள்விகள், உரிமை, திருமணச், இந்து, உயிருடன்