கேள்வி எண் 58 - சட்டக்கேள்விகள் 100
58. CSR ன் அர்த்தம் என்ன? FIR போட்டபின் அவற்றை திருத்தி எழுத முடியுமா?
சிஷிஸி என்பதன் விரிவாக்கம் என்ன? நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமிஸி போடப்பட்டது. தற்போது அந்த FIR-ல் சில திருத்தங்கள் காணப்படுகின்றன. காவல் துறையினரால் போடப்பட்ட திமிஸி-ஐ அவர்கள் திருத்தவோ அல்லது மாற்றி எழுதவோ அதிகாரம் உண்டா? இல்லை என்றால் அவர்கள் மீது எடுக்கக் கூடிய நடவடிக்கையைப் பற்றி தெளிவாகக் கூறவும்.
- ரா.வைஷ்ணவி, மேட்டுப்பாளையம்.
பதில் :
முதலில் CSR என்பதின் விரிவாக்கம், நமது காவல் துறையை சேர்ந்த பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. CSR-ன் விரிவாக்கம் Community Service Register என்பதாகும். காவல்துறையினரால் போடப்பட்ட FIR ஐ சில தேவையான தருணங்களில் மாற்றி எழுத அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
உதாரணமாக, ஒருவருடைய துர்மரணத்திற்காக, 78 று சட்டக்கேள்விகள் 100 (பாகம் - 1) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 174-ன் கீழ் FIR பதியப்பட்டிருக்கும். பிறகு புலன் விசாரணையை அடுத்து அந்த மரணம் ஒரு கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டால், ஏற்கெனவே, போடப்பட்ட FIR-ஐ இ.த.ச. பிரிவு 302-க்கு மாற்றம் செய்வார்கள். அதே நேரத்தில் அது ஒரு கொலை முயற்சி என்று கண்டுபிடிக்கப்பட்டால், இ.த.ச. பிரிவு 307-ற்கு மாற்றக் கூடும். மேலும் ஒருவேளை மருத்துவரின் கவனக்குறைவால் மரணம் சம்பவித்திருந்தால் கண்டுபிடித்திருப்பின் இ.த.ச. பிரிவு 304-க்கு மாற்றம் செய்ய நேரிடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, பிரிவு, போடப்பட்ட, விரிவாக்கம், மரணம், கொலை, க்கு, மாற்றம், கண்டுபிடிக்கப்பட்டால், மாற்றி, திமிஸி, எழுத, அந்த, காவல், என்ன, அதிகாரம்