கேள்வி எண் 57 - சட்டக்கேள்விகள் 100
57. நான் திருமணத்தை பதிவு செய்யவில்லை. என் மனைவி என்னை கணவர் இல்லை என்று சொல்கிறார். என்ன செய்வது?
இராணுவப் பணியின்போது மரணமடைந்தவரால் விதவையான ஒரு பெண்ணை, திருமணமாகாத நான் 1976-ல் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்தேன். அதன் மூலமாக குழந்தைகள் பெற்று தற்போது பேரக் குழந்தைகளையும் பார்த்துவிட்டேன். அனைத்து அரசு ஆவணங்களிலும் என் மனைவியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பட்ட எனது திருமணம் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் என் மனைவி, அவருடைய முன்னாள் கணவன் இறப்பை காட்டி 2011-ல் ஒரு சொத்தை பெற்றுள்ளார். மேலும் முன்னாள் கணவனுடைய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறார். இது தெரிந்தவுடன் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது நம்முடைய திருமணம் பதிவு செய்யப்படவில்லை. சட்டப்படி நான் உங்கள் மனைவி இல்லை என்றும் கூறுகிறார். இவர்தான் என் மனைவி என அங்கீகாரம் பெற நீதிமன்றத்தை நாடலாமா? எங்களது குழந்தைகள் சட்டப் பூர்வ வாரிசுகளா? ஓய்வூதியம் பாதிக்கப்படுமா?
- G.கனகராசு, தூத்துக்குடி.
பதில் :
1976-ல் நீங்கள் விதவை பெண்ணை திருமணம் செய்ததாக கூறியிருக்கிறீர்கள். தற்போது பேரக்குழந்தைகளையும் பெற்றுவிட்டீர்கள். நீங்கள் திருமணம் செய்த காலகட்டத்தில், திருமணம் பதிவு செய்வது என்பது வழக்கத்தில் இல்லை. அதனால் அதற்கு அவசியமில்லை. எப்படியாயினும் சட்டத்தின் பார்வையில் அவர் உங்கள் மனைவி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் உங்கள் குழந்தைகள், உங்களுடைய வாரிசு தான்.
இதற்காக நீதிமன்றம் சென்று தனியாக எந்த சான்றும் பெற வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் மனைவி முன்னாள் கணவருடைய ஓய்வூதியத்தை பெற்று வருகிறார் என்று கூறியிருக்கிறீர்கள். அது உண்மையாக இருக்கும் நிலையில், நீங்கள் இதை பெரிது படுத்தும் பட்சத்தில் உங்கள் மனைவி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாக நேரிடும். இனி இதை எப்படி கொண்டு செல்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மனைவி, திருமணம், உங்கள், இல்லை, பதிவு, மேலும், முன்னாள், நீங்கள், நான், குழந்தைகள், பெற்று, வேண்டிய, எந்த, அவசியமில்லை, தான், சட்டத்தின், செய்யப்படவில்லை, செய்வது, பெண்ணை, தற்போது, வருகிறார், கூறியிருக்கிறீர்கள்