கேள்வி எண் 56 - சட்டக்கேள்விகள் 100
56. எனது கணவருக்கு பாகமாக கிடைத்த சொத்தை எனக்கு தெரியாமல் விற்றுவிட்டார். அதை மீட்க முடியுமா?
ஐயா எனக்கு திருமணமாகி 11 வருடங்களாகின்றன. இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய கணவருக்கு திருமணத்திற்கு முன்னால் அவருடைய மூதாதையர் சொத்தில் சில பாகங்கள் கிடைத்தன. ஆனால், திருமணத்திற்குபிறகு அவருடைய பாகங்களை அவருடைய சகோதரருக்கு விற்று விட்டார். இதில் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. பொதுவாக அவருடைய சொத்தில் எனக்கும், என் குழந்தைகளுக்கும் உரிமை உள்ளதா?
என் கணவர் செய்து கொடுத்த விற்பனை ஆவணத்தின் மீது நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து என்னுடைய பாகத்தையாவது மீட்க முடியுமா?
மனக்குழப்பத்தில் இருக்கிறேன். உங்களுடைய சேவை எங்களை போல எண்ணற்ற மக்களுக்கு அருமருந்தாக உள்ளது. எனக்கு வழி சொல்லவும்?
- N.சந்தியா, மாயவரம்.
பதில் :
முதலில் நீங்கள் உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளீர்கள். அதோடு நிறுத்திக் கொண்டால் நலம்.
உங்கள் கணவர் பாகமாக பெற்ற அவருடைய தந்தையாரின் சொத்தானது அவருடைய சொந்த உரிமை கொண்ட சொத்தாகவே (Self Acquired Property) கருதப்படும். இந்து வாரிசு ரிமை சட்டம் 1956 (Hindu Succession Act 1956) -ன்படி தந்தை உயிருடன் இருக்கும் வரை தகப்பனாரின் தந்தை மூலம் கிடைக்கப் பெற்ற சொத்தில் மனைவியோ, மகனோ, மகளோ உரிமை கோர முடியாது.
ஆகவே சொத்துக்காக அமைதியான வாழ்க்கையை இழக்காதீர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அவருடைய, உரிமை, எனக்கு, சொத்தில், கணவர், உங்கள், தந்தை, பெற்ற, மூலம், என்னுடைய, மீட்க, பாகமாக, முடியுமா, குழந்தைகளுடன், வாழ்ந்து, சந்தோஷமாக, கணவருக்கு