கேள்வி எண் 50 - சட்டக்கேள்விகள் 100
50. கணவரின் மறைவிற்கு பின் தத்தெடுத்த பிள்ளை சட்டப்படி வாரிசாக முடியுமா?
ஒரு இந்து தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவரின் மறைவிற்குப் பின் மனைவி ஒரு சிறுவனை தத்தெடுத்தார். மனைவி, ஒரு வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளார். அதில் தன் கணவருடைய வாரிசு இந்தச் சிறுவன் என சான்றிதழ் உள்ளது. கணவரின் மறைவிற்குப்பின் எடுத்த தத்துப்பிள்ளை எப்படி வாரிசு ஆவார். இது சட்டப்படி செல்லத்தக்கதா?
- D.மார்கபந்து, வேலூர்
பதில் :
கணவனின் மறைவிற்குப் பிறகு, பெறப்பட்ட வாரிசு சான்றிதழ் செல்லத்தக்கதல்ல. குழந்தையை தத்தெடுப்பது என்பது கணவன் மனைவி இருவரும் முழு மன விருப்பத்துடன், செய்யக்கூடிய விஷயமாகும். இதன் அடிப்படையில் மட்டுமே தத்தெடுக்கப்பட்ட குழந்தை சட்டப்பூர்வ வாரிசு ஆவார். தவிர, கணவன் மறைவிற்குப்பின், மனைவி தன் சொந்த விருப்பத்தின் பேரில் தத்தெடுப்பதன் மூலம் கணவர் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவர் முறையான வாரிசாக அமைய இயலாது.
அதனால், மனைவியால் தத்தெடுக்கப்பட்ட குழந்தை இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி கணவருடைய வாரிசு என்று கருத முடியாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வாரிசு, மனைவி, கணவரின், சான்றிதழ், குழந்தை, சட்டப்படி, ஆவார், கணவன், தத்தெடுக்கப்பட்ட, மறைவிற்குப்பின், பின், வாரிசாக, மறைவிற்குப், கணவருடைய