கேள்வி எண் 48 - சட்டக்கேள்விகள் 100
48. எனக்கு சேரவேண்டிய சொத்துக்காக வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு விசாரணைக்கு எடுத்து விரைவாக முடிக்க வழியுள்ளதா?
ஐயா, இறந்து போன எனது தந்தையின் பூர்வீக சொத்தில் எனக்கு சேர வேண்டிய பாகத்தை காவல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற எனது மூத்த சகோதரர், கடந்த 2002-ல் எனது கையப்பம் இன்றி விற்று விட்டு அத்தொகையை வங்கியில் முதலீடு செய்து இன்று வரை அதற்கான வட்டியை பெற்று அனுபவித்து வருகிறார்.
அந்நேரத்தில் என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் வழக்கு தொடர இயலவில்லை. தற்போது 2013-ல் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எனது வழக்குரைஞர் வழக்கு விசாரணைக்கு வர 6 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார். எனது வழக்கை விரைவாக முடிக்க ஏதேனும் வழியுள்ளதா?
- N.சிவராமன், சலவன் பேட்டை, வேலூர்
பதில் :
பொதுவாக சிவில் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கங்களின் அடிப்படையில் காலதாமதம் ஏற்படுவது இயல்புதான். அதற்காக 6 வருடம் என்று நிர்ணயிக்க முடியாது. சில சந்தர்ப்பங்களில் வழக்கு தொடர்ந்தவர் மூத்த குடிமகனாகவோ (அ) தீராத நோயினால் அவதிப்படுபவராகவோ இருக்கும் பட்சத்தில்(அ) தொடரப்பட்ட வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக் களுக்கு கடும் பாதிப்போ (அ) சேதமோ ஏற்படும் என்ற நிலை இருப்பின் உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய காரணங்களை தெரியப்படுத்துவதன் மூலமும் மேலும் உயர்நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் வெ.குணசேகரன் ஙி.ஷிநீ.,ஙி.லி னு 69 சம்பந்தப்பட்ட வழக்கினை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஆணையிட முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வழக்கு, எனது, முடிக்க, மாவட்ட, நீதிமன்றத்தில், சம்பந்தப்பட்ட, மூத்த, வழியுள்ளதா, விசாரணைக்கு, விரைவாக, எனக்கு