கேள்வி எண் 35 - சட்டக்கேள்விகள் 100
35. வரதட்சணை வழக்கு பதிவு செய்வதாக மிரட்டும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யவேண்டும்?
ஐயா என் பெயர் சிவராமன். நான் திருச்சி மாவட்டம் குளித்தலையில் வசிக்கிறேன். என்னுடைய சகோதரனின் மனைவி தற்போது பிரிந்து வாழ்கிறார். என் சகோதரனுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி, இதுவரை எந்த வழக்கும் பதியவில்லை. தற்போது வரதட்சணை கொடுமை என்று கூறி இந்திய தண்டனைச் சட்டம் உட்பிரிவு 498கி-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டுகிறார். எங்கள் குடும்ப உறவினர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க என்ன செய்யவேண்டும்.?
பதில் :
தற்போதைய காலகட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 498 A சட்டத்தை, பெண்கள் தவறாக பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது. கணவரை விவாகரத்து கொடுக்க செய்யவும், குழந்தையை தன் வசம் பெறவும், இவற்றை பெரிய ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
அதுமட்டுமல்லாமல், தற்போது பெண்கள் கொடுக்கும் 498 A புகார்களை காவல்துறையும் உடனடியாக பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், தவறு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் கூட மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
உங்கள் விஷயத்தைப் பொறுத்தவரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் மேற்படி தரப்பிலிருந்து வரும் மிரட்டல்களை புகாராக அளிக்கலாம். காவல்துறையினர் அவர்களை அழைத்து அறிவுறுத்தலாம். தேவையெனில் நடவடிக்கையும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் குடும்பத்தில் தவிர்க்க முடியாத பிரிவு ஏற்பட நேரிடும் போது, இரு குடும்பத்தாரும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அழைத்து பேசி பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்வது சாலச்சிறந்ததாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தற்போது, பதிவு, பெண்கள், குடும்ப, அழைத்து, குடும்பத்தில், சட்டம், உள்ள, இந்திய, என்ன, முன்னெச்சரிக்கை, செய்யவேண்டும், கூறி, வரதட்சணை, தண்டனைச்