கேள்வி எண் 26 - சட்டக்கேள்விகள் 100
26. எனக்கு சொந்தமான இடத்தில் இன்னொரு வீட்டிற்கு மாடிப்படி உள்ளது. அதை எடுக்க மறுத்து வழக்கு தொடுத்துள்ளார். அவர் வெற்றி பெறமுடியுமா?
ஐயா, என்னுடைய வீட்டிற்கு முன்னால் எனக்கு சொந்தமாக சிறிது இடம் உள்ளது. இந்த இடத்தில் என்னுடைய பெரியப்பா மாடிப்படி கட்டி மேல்தளத்திலுள்ள அவரது வீட்டிற்கு வழி அமைத்துவிட்டார் கடந்த 18 வருடங்களாக நான் அதை எடுக்கும்படி கூறியும் அவர் அதை எடுக்க மறுப்பதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் வெற்றி பெறமுடியுமா?
- D. ரேகா, கிண்டி
பதில் :
உங்கள் பெரியப்பா நீங்கள் இருக்கும் இடத்தின் மேல் தளத்தில் இருப்பாரேயானால் அவருக்கு நிச்சயமாக மேல் தளத்திற்கு செல்வதற்காக வழி என்பது அவசியத் தேவை. ஏற்கனவே மேல் தளத்திற்கு செல்வதற்கான வேறு வகையில் எவ்விதமான வழிகளும் இல்லாத பட்சத்தில் அவர் தொடுத்த வழக்கு அவருக்கு சாதகமான முறையில்தான் அமையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அவர், வீட்டிற்கு, மேல், பெறமுடியுமா, தளத்திற்கு, என்னுடைய, பெரியப்பா, வெற்றி, அவருக்கு, தொடுத்துள்ளார், மாடிப்படி, இடத்தில், உள்ளது, எடுக்க, வழக்கு, எனக்கு