கேள்வி எண் 19 - சட்டக்கேள்விகள் 100
19. எனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா?
சார், நான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். என்னுடன் நட்பாக பழகிய நபர் ஒருவர் நாங்கள் ஒன்றாக இணைந்திருந்த சில காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டுகிறார். அவர்மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று இருக்கிறேன். அப்படி நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அவருக்கு கிடைக்கும் தண்டனை என்ன என்று கூறவும்.
- ஏ.சர்மிளா, சென்னை
பதில் :
பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும் போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நடவடிக்கை, சிறைத்தண்டனையும், ஆண்டுகள், காட்சிகளை, வெளியிடுவதாக