அகநானூறு (நெடுந்தொகை) - சங்க காலம்
ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைக்கு உரியன. 2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன. மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
அரசியல், சமூக வரலாறுகள்
அகநானூறு பண்டைத் தமிழரின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அறியப் பெருந்துணை செய்யவல்லது. மூவேந்தர் பலர் பற்றியும் குறுநில மன்னர் பலர் பற்றியும் இது பதிவு செய்துள்ளது. வெண்ணிப்போர், ஆலங்கானத்துப் போர் முதலான பெரும்போர்கள் உவமை வாயிலாக விளக்கப்பட்டுள்ளன. யவனரின் கப்பல்கள் முசிறித் துறை முகத்திற்குப் பொன்னொடு வந்து, மிளகொடு திரும்பியதாக ஒரு செய்யுள் குறிப்பிட்டுள்ளது (149). ஒரு கன்னிப் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து, ‘அவளைத் தெரியாது’ என்று வாதிட்ட அறம் அற்ற ஒருவனுக்குக் கள்ளுர் அவையினர் தண்டனையளித்த செய்தியும் (256) அகநானூற்றில் காணப்படுகிறது.
வெண்ணிப்போரில் புண்பட்ட பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து மாண்ட செய்தி கேட்டுச் சான்றோர் பலர் மாண்ட செய்தியும் (58) பேசப்படுகின்றது. குடவோலை முறையில் அவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டதை 77 ஆம் பாட்டால் அறியலாம். மக்களின் அன்றாட வாழ்வு பற்றியும், பழக்க வழக்கங்கள் பற்றியும் அரிய செய்திகள் இதில் உள்ளன. சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்போம்.
மக்கட்பேற்றின் சிறப்பினை,
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுவின்று எய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் (66) |
(இம்மை = இப்பிறவி; இசை = புகழ்; மறுமை உலகம்
= வான் உலகம்; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர்
=பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)
என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.
தமிழர் திருமணமுறை பற்றி இந்நூலின் 86, 136
ஆகிய செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன.
இசை
இந்நூலின் 82, 111, 352, 301 ஆகிய பாடல்கள் பண்டைத்
தமிழிசையைப் பற்றி அறிய
உதவுகின்றன. 352ஆம் செய்யுள் இசை
இலக்கணத்தைக் குறிப்பிடுகின்றது.
இதிகாசச் செய்திகள்
சேதுக்கரையில் ஓர் ஆல மரத்தடியில், கடல் கடந்து
இலங்கைக்குச் செல்வது பற்றிய ஆலோசனையில் இராமன்
ஆழ்ந்திருந்த போது, ஆலமரத்திலிருந்து பறவைகள் ஒலி எழுப்பி
இடையூறு செய்தன. அப்போது
இராமன் தலைநிமிர்ந்து பார்த்த
பார்வையில் அவை ஒலி அடங்கின. தலைவியின் திருமணச்
செய்தி
அறிந்த அலர்தூற்றுவோர் அடங்கிப் போயினர் என்பதை
உணர்த்தத் தோழி இராமனது நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறாள்.
கம்பர் காப்பியத்தில் கூட இல்லாத இச்செய்தியை அகநானூறு (70)
கூறுகிறது.
கண்ணபிரான் கோபியர் தழை உடுத்திக் கொள்ளுதற்கு
ஏற்ப மரத்தின் கிளையை மிதித்த செய்தி
ஒருபாட்டில்
காணப்படுகிறது. (59)
அகநானூறு (நெடுந்தொகை) - Akananuru - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அகநானூறு, நெடுந்தொகை, முடிவன, பற்றியும், காலம், சங்க, தமிழ்நாட்டுத், தகவல்கள், செய்யுட்கள், செய்தி, நூல்கள், பலர், இலக்கிய, தமிழ், செய்திகள், காணப்படுகிறது, செய்யுள், செய்தியும், மாண்ட, இம்மை, செம்மலோர், இந்நூலின், ஆகிய, இராமன், | , பற்றி, உலகம், எய்துப, செயிர்தீர், பயந்த, மறுமை, எண்ணில், list, tamilnadu, information, literatures, tamil, akananuru, sangam, period, இதற்கு, மூன்று, அரசியல், சமூக, பண்டைத், இதில், உரியன, முறையில், கொண்டு, வரலாற்றையும்