ஆச்சாரக் கோவை - ஆறாம் நூற்றாண்டு
‘ஆசாரம்’ என்னும் வடசொல் ஒழுக்கம் என்று பொருள்படுவது. நல்லொழுக்கக் கோட்பாடுகளைத் தொகுத்துக் கோவையாகத் தருவதனால் இப்பெயர் பெற்றது. சிறப்புப் பாயிரம் நீங்கலாக இதில் நூறு வெண்பாக்கள் உள்ளன. வெண்பா வகையில் குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை ஆகிய பல வகையும் இதில் உள்ளன.
இது வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. இதனை
ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம் யாரும் அறிய அறனாய மற்று அவற்றை ஆசாரக் கோவை எனத் தொகுத்தான் |
என்ற சிறப்புப்பாயிரப் பகுதியால் அறியலாம்.
ஆசிரியர்
இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் என்னும் சான்றோர். பெருவாயில் என்ற ஊரினர் இவர் என்று தெரிகிறது. கயத்தூர் என்ற பெரிய ஊர் இதன் அருகில் இருந்தது போலும்! இவர் வடமொழி வல்ல கல்வியாளர் என்பது நூலால் விளங்கும்.
சிறப்புச் செய்திகள்
அகந்தூய்மையளிக்கும் உயர்ந்த அறங்களை வற்புறுத்துவதோடு, அன்றாட வாழ்க்கையில கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுகலாறுகளையும் இது வற்புறுத்தியுள்ளது. காலையில் எழுதல், காலைக்கடன் கழித்தல், நீராடல், உணவு உட்கொள்ளல், உறங்குதல் ஆகிய நடைமுறைகளின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இது போல் வேறு எந்த நூலும் சொல்லவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - Acarakkovai - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஆச்சாரக், நூற்றாண்டு, ஆறாம், கோவை, நூல்கள், தகவல்கள், இலக்கிய, தமிழ்நாட்டுத், தமிழ், இதன், ஆசிரியர், பெருவாயில், இவர், | , வேண்டிய, கடைப்பிடிக்க, ஆகிய, என்னும், list, literatures, tamil, century, acarakkovai, information, tamilnadu, இதில்