தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
குவார்ட்ஸ் :
தென்கனிக் கோட்டை வட்டத்தில் பின்ன மங்கலத்தில் தரமான குவார்ட்ஸ் 10,1520 டன்களும், பஞ்சப் பள்ளியில் சுமார் 93,750 டன்களும் கிடைக்கக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.
கருங்கல் :
அஞ்சன ஹள்ளி, பேவனுர், பெண்ணாகரத்தில் 20,00,000 கனமீட்டர் பரப்பளவில் கருங்கல் தென்படுகின்றன. அரூர் வட்டத்தில் 6,00,000 கன மீட்டரிலும், பாலக்கோடு வட்டத்தில் சுமார் 18,000 கன மீட்டரிலும் கிடைக்கிறது. தென்கனிக் கோட்டைப் பகுதியில் சுமார் 15600 கன மீட்டர் கருங்கல் கிடைக்கிறது.
கிரே கிரானைட் :
தர்மபுரி, கிருஷ்ணகிரி வட்டங்களில் கிடைக்கிறது. பாலீஷ் செய்யப்பட்ட கற்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
டாமின் |
தமிழ்நாடு மினரல்ஸ் என்னும் அரசு நிறுவனம் கீழ்கண்ட இடங்களில் பணி செய்து வருகிறது. கிருஷ்ணகிரி வட்டத்தில் சேந்தரப்ள்ளி; சூலமலை; அரூர் வட்டத்தில் கோபிநாதம்பட்டி; பெண்ணாகரம் வட்டத்தில் அஜ்ஜனஹள்ளி, பேவனுர், ஜம்னா ஹள்ளி, தொன்ன ஹஂட்டஹள்ளி மற்றும் பத்ரஹள்ளி முதலிய இடங்களில் டாமின் நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. இங்குத்தயாராகும் கற்கள் குறிப்ாக ஜப்பான், மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
காட்டுவளம் :
மாவட்டத்தின் மொத்த பரப்பில் 33% காடுகளாகும். மாநில அளவில் இதன் பங்கு 14.3% ஆகும். மொத்த வனப்பரப்பு:3,66,231 ஹெக்டேர். தர்மபுரி மாவட்டத்தில் கிடைக்கும் முக்கிய காட்டுப் பொருள்களும், பரப்பளவும்:
1. விறகு மரங்கள் 3467 ஹெக்டேர்
2. சாதாமரங்கள் 657 ஹெக்டேர்
3. மூங்கில் 3359 ஹெக்டேர்
4. சந்தனமரம் 574 ஹெக்டேர்
5. யூகலிப்ட்ஸ் 1483 ஹெக்டேர்
6. புல் 2712 ஹெக்டேர்
7. தேக்கு மற்றும் வீடு கட்ட உதவும் மரங்கள் 517 ஹெக்டேர்
8. புளியமரம் 1010 ஹெக்டேர்
பழங்குடிகள் :
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் குறும்பர், இருளர், பஸ்தர், சிவாச்சாரத்தார் முதலியோர்.
குறும்பர் :
குறும்பரில் எக்கிடி, ஈடிகர் என்ற பிரிவு உண்டு. ஆடுவளர்ப்பையே முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். மற்ற மலைவாழ் மக்களை விட பொருளாதாரத்தில் குறும்பர் சற்று உயர்ந்தே காணப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழியில் தெலுங்கு வாடை வீசுகிறது. இவர்கள் மஞ்சு மலையிலும் பிற இடங்களிலும் வாழ்கின்றனர்.
இருளர் :
இருளர்கள் சித்தாபுரம், கடிநாடு, ஹோபள்ளி முதலிய இடங்களில் பரவி வாழ்கின்றனர். ஏறத்தாழ 300 குடும்பங்கள் இவ்விடங்களில் உள்ளனர். இருளர்களுக்கு சொந்த வீடு குறைவு. காட்டு, மேட்டிலேதான் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் முக்கியத்தொழில் தேன் எடுப்பதும், அரக்கு விற்பனையும்தான். மாரண்ட ஹள்ளியின் பல பகுதிகளில் இன்று வாழ்கின்றனர். இவர்களை அச்சுறுத்துவது அம்மை நோயாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஹெக்டேர், தர்மபுரி, வட்டத்தில், மாவட்டங்கள், தமிழக, வாழ்கின்றனர், tamilnadu, கருங்கல், இடங்களில், டாமின், கிடைக்கிறது, சுமார், தகவல்கள், குறும்பர், தமிழ்நாட்டுத், | , மொத்த, இவர்கள், இருளர், முதலிய, மரங்கள், முக்கிய, வீடு, மாவட்டத்தில், அரூர், குவார்ட்ஸ், information, districts, dharmapuri, தென்கனிக், டன்களும், கிருஷ்ணகிரி, மீட்டரிலும், பேவனுர், ஹள்ளி, கற்கள்