குப்த பேரரசு
கலையும் பண்பாடும்
கலை, அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் குப்தர் காலத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. இதனாலேயே இது ஒரு பொற்காலம் என அழைக்கப்படுகிறது. சில அறிஞர்கள் இக்காலத்தை மறுமலர்ச்சிக் காலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால், குப்தர் காலத்திற்கு முன்பு எந்தவொரு இருண்டகாலமும் இல்லை என்பதையும் நாம் உணரவேண்டும். எனவே, குப்தர் காலத்தில் ஏற்பட்ட இந்த பண்பாட்டு வளர்ச்சியை இந்திய அறிவுசார் நடவடிக்கைகளின் உச்சகட்டம் என்று அழைக்கலாம்.
கலை, கட்டிடக் கலை
தியோகார் கோயில் |
ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். காந்தாரக் கலையின் தாக்கத்தை இவற்றில் காணமுடிய வில்லை. ஆனால், மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாயலைக் காணலாம். சாரநாத் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , குப்தர், வரலாறு, இந்திய, குப்த, வளர்ச்சி, பெற்றன, காலத்தில், பேரரசு, அருகிலுள்ள, கலையின், சிற்பங்கள், சிறந்த, புத்தர், கோயில், கலைக்கு, அறிஞர்கள், பிராமண, இந்தியா, சமயமும், சிறப்பான, கட்டிடக், காலம், தியோகார்