அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947)
3. மத்தியில் இரட்டையாட்சி கொண்டு வரப்பட்டது. ஒதுக்கப்பட்ட துறைகள் தலைமை ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தன. மாற்றப்பட்ட துறைகள் அமைச்சரவையின் பொறுப்பில் விடப்பட்டன.
4. மாகாணங்களில் இரட்டையாட்சி ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண நிர்வாகக்குழுவின் தலைவராக ஆளுநர் இருப்பார். அமைச்சரவையின் ஆலோசனைகளின்பேரில் அவர் நிர்வாகத்தை நடத்துவார். எனவே மாகாண அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பில் விடப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டப்பேரவைக்கு அவர்கள் பொறுப்புள்ளவர்களாவர்.
5. வங்காளம், சென்னை, பம்பாய், ஐக்கிய மாகாணம், பீகார் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
6. சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், இந்திய கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் தனித்தொகுதி முறை விரிவு படுத்தப்பட்டது.
7. ஒரு தலைமை நீதிபதி, ஆறு நீதிபதிகள் கொண்ட கூட்டாட்சி நீதிமன்றம் டெல்லியில் நிறுவப்பட்டது.
மாகாண சுயாட்சி பல இடங்களில் வெற்றிகரமாக செயல்படவில்லை அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆளுநர் கட்டாயமாக கேட்டு நடக்க வேண்டியதில்லை என்ற நிலையே இதற்குக் காரணம். மாகாண அரசின் உண்மையான அதிகாரம் ஆளுநரிடமே இருந்தது. இத்தகைய குறைபாடுகள் இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி நடக்கவிருந்த மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் கலந்து கொள்வது என முடிவெடுத்தது. முந்தைய சட்டங்களைவிட இச்சட்டம் இந்தியர்களுக்கு முற்போக்கானதாக காணப்பட்டது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி 1937 பிப்ரவரியில் மாகாண சட்ட மன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரஸ் இத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது. 1937 ஜூலை 7 ஆம் நாளன்று தலைமை ஆளுநர் லின்லித்கோ பிரபு அளித்த ஒத்துழைப்பை அடுத்து ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவைகளை அமைத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947) , மாகாண, இந்திய, வரலாறு, ஆளுநர், அரசியலமைப்பின், மாகாணங்களில், காங்கிரஸ், தலைமை, பட்டியல், வளர்ச்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட, அமைச்சர்களின், கொண்ட, சுயாட்சி, கட்சி, இந்தியா, துறைகள், அரசின், அமைச்சரவையின், பொறுப்பில், இரட்டையாட்சி