வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 77
கீழ்ப் பிரதேசத்தார் எதிர்பார்க்கவே இல்லை. இந்நிலையில் ஒருநாள் இந்திரன் பொறுக்கி எடுத்த சில யுத்த வீரர்களுடன் பர்ஷு க்களைத் தாக்கினான். தங்கள் மீது இவ்விதம் திடீரென்று யுத்தம் தொடுக்கப்பட்டிருப்பதின் உத்தேசத்தைத் தெரிந்து கொள்வதற்கு, பர்ஷு க்களுக்கு நேரமாகவில்லை. இந்த யுத்தத்தில் தோற்றால் தாங்கள் பூண்டோடு அழிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். ஆகையால் அவர்களும் தங்கள் உயிரைப் பணயமாக வைத்துச் சண்டை செய்தனர். ஆயினும் தங்களுடைய எல்லாக் கிராமங்களையும் ஒன்று சேர்ப்பதற்குச் சமயமோ சந்தர்ப்பமோ கிடைக்கவில்லை. இந்திரனுடைய சேனையானது பர்ஷுக்களினுடைய கிராமங்களை ஒவ்வொன்றாகத் தாக்கி ஆயிரக்கணக்கில் ஜனங்களைக் கொன்று குவித்தது. யாரையும் கைது செய்யவே இல்லை. கீழ் மத்ரர்கள் நிலைமையின் பயங்கரத்தை உணர்ந்த போது காலம் கடந்து விட்டிருந்தது. போதிய ஏற்பாடு செய்யக்கூட அவர்களுக்குச் சாவகாசம் இல்லை. இந்நிலையில் அவர்களுடைய கிராமங்களும் தாக்கப்பட்டு ஜனங்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டனர். ஆனால் பெண்களை மட்டும் கொல்லவில்லை. அவர்களை தங்கள் பெண்களோடு சேர்த்துக் கொண்டனர்; குழந்தைகள் முதல் விருத்தர் வரை அகப்பட்ட எல்லா ஆண்களும் கொல்லப் பட்டனர். இவர்களிடம் வேலை செய்த அடிமைகளில் யாரார் தங்கள் சொந்த நாட்டிற்குப் போக விரும்பினார்களோ, அவர்களெல்லாம் திருப்பி அனுப்பப் பட்டனர். கீழ் மத்ரர்களிலும் பர்ஷுக்களிலும், எதிரிகளிடம் அகப்படாமல் உயிர் தப்பிய சில
ஆண்களும் பெண்களும் வட்சு நதிப் பிரதேசத்தை விட்டு மேற்குத் திசையை நோக்கி ஓடினர். இவ்விதம் உயிர் பிழைத்து ஓடியவர்களுடைய சந்ததியார்தான் பின்னே ஈரானில் பர்ஷு, பெர்சியன் என்றும் மத்ரா, மிடியன் என்றும் பிரபலமடைந்தவர்கள். தங்களுடைய முன்னோர்கள் மீது இந்திரனுடைய தலைமையில் நடந்த கொடுமையை அவர்களுடைய பின் சந்ததியராகிய இவர்கள் மறக்கவே இல்லை. இதனாலேயே ஈரானியர்கள் இந்திரனைத் தங்களுடைய பெரிய சத்துருவாக மதித்தனர். இங்கே வட்சுநதிப் பிரதேசம் பூராவும், மேல் மத்ரர், புருக்கள், இந்த இரு சமூகத்தாருடைய ஆதீனத்துக்கு வந்து விட்டது. இரு சமூகத்தாரும், வட்சு நதியின் வலது பக்கத்தை ஒருவரும் இடது பக்கத்தை ஒருவருமாகப் பிரித்துக் கொண்டனர்.
வட்சுநதிப் பிரதேச வாசிகளாகிய இவர்கள், நூதன முறைகளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புராதன முறைகளைத் திரும்பவும் நிலை நிறுத்துவதற்கு வேண்டிய பிரயாசை எடுத்தனர். ஆனால் தாமிர ஆயுதங்களை விட்டு விட்டு, கல் ஆயுதங்களின் யுகத்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களால் முடியவில்லை. தாமிரத்தைப் பெறுவதற்காக இந்த மலைப் பிரதேச வாசிகள், வெளிப் பிரதேசத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாய் இருந்தது.
அடிமைகளை வைத்து வேலை வாங்கும் பழக்கத்தை இவர்கள் அடியோடு ஒழித்து விட்டார்கள். வெளிப் பிரதேசத்தார் இங்கு வந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 77, புத்தகங்கள், தங்கள், இல்லை, மீது, பர்ஷு, பக்கம், இவர்கள், விட்டு, தங்களுடைய, கங்கை, வால்காவிலிருந்து, என்றும், உயிர், வேலை, வட்சு, வட்சுநதிப், முறைகளைத், வெளிப், பிரதேச, பக்கத்தை, வந்து, பட்டனர், ஆண்களும், யுத்த, இந்நிலையில், பிரதேசத்தார், யுத்தம், உள்ளவர்களுக்கும், இந்திரன், இவ்விதம், அவர்களுடைய, கொண்டனர், கீழ், இந்திரனுடைய, சிறந்த, திடீரென்று