வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 30
“ஆனால் நீ எந்த வகையிலும் அவர்களுக்குக் குறைந்தவனல்லவே. உனது ஆசையை நான் எப்பொழுதாவது நிறைவேற்றியிருக்கிறேனோ?”
“ஆனால் திவா! எனது ஆசையை நான் வெளிப்படுத்தியதில்லையே.”
“வார்த்தையினாலல்ல. இப்பொழுதென்ன? இளமையிலே நாம் ஒன்றுகூடி விளையாடுவோமே. அப்பொழுதுங் கூட நீ வாய் திறக்க மாட்டாயே. ஆனால் உன்னை மறந்து விட்டதாக-வஞ்சித்து விட்டதாக இன்றுதான் உணர்ந்தேன். சூர்! கொஞ்சம் என்னைப் பார். இந்த திவா(பகல்) அந்த சூரை (சூரியனை) எப்பொழுதாவது மறக்கிறதுண்டோ? இல்லை சூர்! இனி உன்னை நான் மறக்கவே மாட்டேன்.”
“அப்படியானால் நீ பகலும் நான் பகலோனுமாக ஆகிவிடுவோமா!” “ஆம், சூர்! இதோ உன்னுடைய இந்த அழகிய அதரங்களுக்கு விருந்தளிக்கிறேன்.”
சின்னஞ் சிறு குழந்தைகளைப் போல் நிர்வாணமாய் நிற்கும் அந்த அழகிய யௌவன உருவங்களின் செவ்விதழ்கள் அப்படியே ஒன்றிக் கிடக்கின்றன. சிவந்த கன்னங்களோடு கன்னங்கள், நீல விழிகளோடு விழிகள்.
“நீ என்னுடைய தாயின் மகன். அப்படியிருந்தும் இதுவரை உன்னை மறந்தே விட்டேன்.” திவாவினுடைய நீல விழிகள் நீரைத் துளிர்த்தன. சூரனுடைய சிவந்த கன்னங்கள் அதைத் துடைத்தன.
“திவா! இல்லை; என்னை மறக்கவே இல்லை நீ. பெரியவளாக ஆக உன்னுடைய குரல், கண்கள், உன்னுடைய ஒவ்வொரு அங்கமும் எனக்கொரு புதிராய்த் தோன்றின. ஆகவே நான் உன்னிடமிருந்து விலகியே நின்றேன்.”
“என் மனத்திலிருந்தில்லை.”
“ஆனால் திவா!...”
“இல்லை. இப்பொழுது சொல்; இனிமேல் என்னிடம் வெட்கப்படமாட்டாயே?”
“இல்லை, இனி நாணவே மாட்டேன்; இந்தப் புஷ்பங்களை உன் கூந்தலில் சூடட்டுமா?”
சிறிய குச்சியால் அவளுடைய கூந்தலை வகிர்ந்து அதில் சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், இந்நிறப் புஷ்பங்களை வரிசையாகச் சூட்டினான். எந்தப் புஷ்பத்துக்குப் பக்கத்தில் எதை வைத்தால் அழகு மிளிரும் என்பதைக்கூட அவன் தெரிந்திருந்தான். சூட்டிய பின் அந்தக் கூந்தலை அவளுடைய முதுகுப் பக்கம் விரித்து விட்டான். வெயில் காலத்தில் இந்த வால்கா நதிப் பிரதேச யுவர்களும் யுவதிகளும் அடிக்கடி தண்ணீரில் குதித்து
நீந்தி விளையாடுவது வழக்கம். திவாவின் கூந்தல் இன்னும் ஈரமாகவே இருந்தது. அதில் சில
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 30, புத்தகங்கள், நான், பக்கம், திவா, உன்னை, உன்னுடைய, இல்லை, சூர், கங்கை, வால்காவிலிருந்து, “ஆனால், கன்னங்கள், சிவந்த, விழிகள், புஷ்பங்களை, அதில், கூந்தலை, அவளுடைய, அழகிய, “இல்லை, மாட்டேன், எந்த, இதுவரை, எப்பொழுதாவது, விட்டதாக, சிறந்த, மறக்கவே, அந்த, ஆசையை