வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 28
தொடைகள் திவாவின் கண்களுக்கு இலக்காயின. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அந்தச் சதைகள் திரண்டு ஆடுவதைப் பாருங்கள். அவைகள் திவாவிற்கு ஒரு அபூர்வப் பொருளாய்த் தோன்றுவதில் ஆச்சரியமில்லையல்லவா? சூரஷ்ரவன் பல தடவை அவளுடைய காதலைப் பெறுவதற்கு முனைந்திருக்கிறான்; வாயினாலன்று; சைகையால். நடனத்தில் தன்னுடைய சாதுர்யத்தையெல்லாம் காட்டி, அவளைச் சந்தோஷப்படுத்தி விடலாமென நினைத்தான். ஆனால், அப்பொழுதெல்லாம் அவள், அவளுடை சம்பூரண மேனி, பரிவாரத்தின் இதர வாலிபர்களுக்கே உரிமைப் பொருளாயிருந்தது. திவாவின் சிவந்த உதடுகளை ஒட்டி முத்தமிடுவது அந்த யுவர்களின் உதடுகள்தான். நடனமாடும்போது அவளுடைய நீண்ட அழகிய கைகளோடு பின்னிக் கிடப்பது அவர்களுடைய கைகள்தான் அவளுடைய நீல விழிகளோடு படிந்து கிடப்பது அவர்களுடைய கண்களே தான். அவளுடைய மார்பையும் தோளையும் தழுவி ஆலிங்கனம் செய்வது அந்த வாலிபர்களின் மார்பும் தோள்களும்தான். அப்பொழுதெல்லாம், பாவம், சூரஸ்ரவனுக்கு, திவாவின் ஒரு முத்தம், ஓர் ஆலிங்கனம், ஏன், அவளுடைய காதல் பார்வையுங்கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இன்று திவாவின் இதயத்தில்-?
தன்னுடைய உள்ளங்கைகளில் புஷ்பங்களை நிரப்பிக் கொண்ட சூரன், திவாவை நோக்கி வந்தான். திவாவின் மிதக்கும் விழிகள், அவனுடைய திறந்து கிடக்கும் அவயவங்களையும், அவற்றின் பூரணப் பொலிவையும் அப்படியே பருகிக் கொண்டிருக்கின்றன. அவனுடைய அகன்ற மார்பும் அதற்கு
உள்ளடங்கிய வயிறும் அவளை ஆகர்ஷிப்பதில் ஆச்சரியமில்லையே! ஆனால் இவற்றைப் பார்த்த அவளுடைய இதயத்தில் கொஞ்சம் துக்கமும் உண்டாயிற்று. இதுவரை இந்தக் கட்டழகன் மீது கவனம் செலுத்தாதிருந்து விட்டோமே என்று நினைத்தது அவளுடைய நெஞ்சம். உண்மையில் குற்றம் அவளுடையதல்ல. சூரனுடைய வாய்க்குப் பூட்டப்பட்டிருந்த அவனுடைய கூச்சமும் நாணமுமே குற்றவாளிகள். தட்டினால்தானே கதவு திறக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 28, அவளுடைய, புத்தகங்கள், அவனுடைய, திவாவின், தன்னுடைய, பக்கம், அவள், கங்கை, வால்காவிலிருந்து, அப்பொழுதெல்லாம், நினைத்தது, நெஞ்சம், அந்த, அவர்களுடைய, இதயத்தில், மார்பும், ஆலிங்கனம், அந்தப், கிடப்பது, அடுத்து, அவளுக்கு, அழகிய, மீது, சிறந்த, அகன்ற, பருகிக், திரளும், இன்று, நீண்ட, கொண்டிருக்கின்றன, சதைகள்