வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 246
இன்று, பெரிய பெரிய தனிச் சொத்துடைய பௌத்த பிக்ஷு க்கள் இருக்கிறார்கள். அறிஞர் மஜ்தக் பிரம்மச்சரியத்தையும் பிக்ஷு வாவதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மனிதர்கள் இயற்கை வாழ்வு-காதல் வாழ்வு வாழ்ந்து, குழந்தை குட்டிகளை வளர்க்க வேண்டுமென்றே கூறினார். தீமைகளுக்கெல்லாம் ஆணிவேர் “நான்”, “என்னுடையது” என்பதுதான் என்று அவர் உபதேசித்தார். சொத்துக்கள் தனித்தனியாக இருக்கக் கூடாதென்றும், எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சம்பாதித்து ஒன்றாகச் சேர்ந்தே சாப்பிட வேண்டுமென்றும் கூறினார். கணவனும் மனைவியும் தனித்திருக்கக் கூடாதென்பதும், காதல் சுதந்திரமுள்ளதாக இருக்க வேண்டுமென்பதும் குழந்தைகள் இருவருக்குமே பொதுவாகக் கருதப்பட வேண்டுமென்பதும் அவருடைய கொள்கைகள். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டுமென்று அவர் உபதேசித்தார். அறிஞர் மஜ்தக்கையும் அவரைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானவர்களையும் கொன்று குவித்து, பாரசீக மன்னன் நௌஷேர்வான் நியாயமூர்த்தி என்ற பட்டத்தைப் பெற்றான் என்பதைக் கேள்விப்பட்டதும், இந்த உலகில் அரசர்கள் இருக்கும் வரை அவர்களது தான-தயவிலே வாழும் பிராமணர்களும் இருப்பார்களென்பதும் அவர்கள் இருவரும் இருக்கும் வரை இந்த உலகத்தைச் சுவர்க்கமாக ஆக்க முடியாதென்பதும் எனக்குத் தெளிவாகிவிட்டது.
____________________________________________________
* மஜ்தக்-பாரசீகத்தில் பிறந்த ஓர் அறிஞர். சௌராஷ்டிர மத ஸ்தாபகர்களில் ஒருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 246, பிக்ஷு, புத்தகங்கள், அவர், பக்கம், அறிஞர், சங்கக், கூறினார், வால்காவிலிருந்து, கங்கை, ஒன்றாகச், உபதேசித்தார், வேண்டுமென்பதும், இருக்கும், காதல், இன்று, சிறந்த, பெரிய, மஜ்தக், வாழ்வு