வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 226
முதலிய எல்லாத் தொழிலாளர்களும் தங்கள் தொழில் திறமையைக் காட்டத்தான் செய்கிறார்கள். அரச மாளிகையைக் கலையுணர்ச்சியோடு அலங்காரம் செய்த கைகள். இந்தக் கிராமத் தொழிலாளரின் கையோடு தொடர்புடையவையே. ஆனால் அவர்களின் உடம்பையும் வீடுகளையும் பார்த்தால் இவர்களின் தொழில் திறமையும் சிருஷ்டிகளும், வெறும் கனவுதானோ என்ற சந்தேகம் எழும். கிராமங்களிலிருந்து சிறிது சிறிதாக ஒன்றுசேர்ந்து, அந்தப் பொருள்கள் நகர மாளிகைகளுக்கும் வியாபாரச் சாலைகளுக்கும் போய்ச் சேருகின்றன. அதன் பெரும்பகுதி, அங்கிருந்துமேற்குச் சமுத்திரக்கரையிலுள்ள பரூகச்சத்தின் வழியாக ஈரான், ஆப்பிரிக்கா முதலிய தேசங்களுக்கும், கிழக்குக் கரையிலுள்ள தமலூக் வழியாக ஜாவா, சுமத்ரா முதலிய தேசங்களுக்கும் சென்றன. பாரத தேசத்தின் கடல் வியாபாரம் இதற்கு முன்னால் இவ்வளவு பிரபல மடைந்ததில்லை. குப்தர்கள் ஆட்சிக்கு முன்னால், பாரதத்தின் பொருள்களுக்காக வெளிநாட்டுச் செல்வம் இவ்வளவு வந்து குவிந்ததும் கிடையாது. ஆனால் இந்தப் பெரும் செல்வத்தால் லாபம் யாருக்கு? இந்தப் பொருள்களின் மீது பெரிய பெரிய வரிகளை விதித்து வசூல் செய்யும் குப்த அரசர்களுக்கு-அவர்களை அண்டி வாழும் குறுநில மன்னர்களுக்கு கடைசி வரிசையில் வந்தாலும் கடல் வியாபாரிகளும் நகர வியாபாரிகளும் இந்த லாபத்திலே குறைவான பங்கைப் பெறுகிறவர்களல்ல. இவைகளையெல்லாம் பார்த்த பிறகு, கிராமத்தின் தொழிலாளிகளும் விவசாயிகளும் ஏழையாய் இருப்பதின் காரணத்தைத் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்ல, அந்த ஏழ்மைச் சூழ்நிலையிலும், போக்குவரத்துப் பாதைகள் யாவும் திருடர் பயமின்றிப் பூரணப் பாதுகாப்போடு இருப்பதற்கு, குப்த அரசர்கள் செய்துள்ள ஏற்பாடுகளின் காரணத்தையும் தெரிந்து கொண்டேன்.
கிராமங்களில் ஏழ்மை நிறைந்திருக்கிறது என்றாலும், அந்த நெஞ்சிலே நெருப்பைக் கொட்டும் காட்சியை அங்கு காண முடியாது. மிருகங்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 226, புத்தகங்கள், பக்கம், அந்த, முதலிய, மட்டுமல்ல, சிறந்த, வால்காவிலிருந்து, கங்கை, இவ்வளவு, முன்னால், இந்தப், வியாபாரிகளும், தெரிந்து, கடல், குப்த, பெரிய, செய்கிறார்கள், மெல்லிய, யாவும், அங்கு, தங்கள், வழியாக, தொழில், தேசங்களுக்கும்