வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 152
கொண்டதும் ஏழு மாடிகளையுடையதுமான, ஒரு பெரிய மடத்தைக் கட்டுவித்தாள். இந்த மடம் ‘பூர்வாராம் மிருகார்மாதா மடம்’ என்று பிரசித்தமாக அழைக்கப்பட்டது. தேச தேசாந்திரங்களிலிருந்தும் திரவியங்கள் பெருக்கெடுத்து வந்து, இந்தத் தனவந்தர்களிடம் குவிந்து கொண்டிருக்கும் போது, இவர்களுடைய செல்வச் செழிப்பைப் பற்றி வருணிக்கவா வேண்டும்!
ஜயவலி, உத்தாலக், யக்ஞவல்க்கீயன் முதலியவர்கள் வேள்வி முதலிய தேவதை வணக்கத்துக்கு இரண்டாவது ஸ்தானத்தைக் கொடுத்து, உண்மையில் முக்தியடைவிக்கும் சாதனம் பிர்மவாதமே என்று நிலைநிறுத்திவிட்டார்கள். ஜனகனைப் போன்ற பெரிய அரசர்கள் மிகுந்த சன்மானங்களைக் கொடுத்து பிர்மவாதத்தைப் பற்றிச் சர்ச்சை செய்யும் பெரிய பெரிய சபைகளைக் கூட்டுவித்தார்கள். இதனால் வேதத்துக்கு அப்பாலும் கற்பனை செய்வதற்கு- சிந்திப்பதற்கு வழி திறக்கப்பட்டது. மேலும் தேசத்திலே சுதந்திரமான கட்டுப்பாடற்ற சிந்தனைகள், எண்ணங்கள், ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுக்க ஆரம்பித்த காலம் அது. சுய சிந்தனையாளர்கள், தங்களுடைய எண்ணங்களைச் சாதாரணச் சபைகளில் பொதுஜனங்களுக்கு முன்னே வைத்தார்கள். பொதுஜனங்கள் கூடும் இந்தச் சபைகளில், பிரசங்கம் செய்யும் முறையிலோ அல்லது தர்க்கம் செய்து பேசும் முறையிலோ தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள். பல தலைமுறைகளுக்கு மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பிர்மவாதத்தைச் சிருஷ்டித்த பிரவாஹன், ஜீவாத்மா பரமாத்மாவின் நிலையை அடையும் பிர்ம சாட்சாத்காரத்திற்குச்
சந்யாசம், தியானம், தவம் முதலிய பல உபாயங்களையும் கூறியிருந்தான்.
இப்பொழுது, உபநிஷதம் கற்பித்த பிர்மவாதத்தை ஏற்றுக்கொள்ளாத பெரிய சிந்தனையாளர்களும், தங்கள் புதிய கருத்துக்களோடு சந்யாசம், பிரமச்சரியம் முதலியவைகளையும் வற்புறுத்த ஆரம்பித்தனர். அஜீத்கேசகம் பலன், உண்மையிலேயே ஒரு நாஸ்திகன். அதாவது பௌதிகவாதி. பிரத்தியட்சப் பொருள்களைத் தவிர்த்து, ஆத்மா, கடவுள் பக்தி, நித்தியத்துவம், சுவர்க்க-நரகம், புனர் ஜென்மம் முதலியவைகளில் எதையும் அவன் ஒப்புக் கொள்வதில்லை. ஆயினும் அவன் ஒரு துறவி. கடுமையான பிர்மச்சர்யத்தை அனுஷ்டித்தான். அப்பொழுது அதிகாரப் பதவியிலிருந்த அரசர்கள் சேனைத் தலைவர்களின் அனுதாபத்தைப் பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும்! அவர்களுடைய கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காகவாவது, அவன் தன்னுடைய பௌதிகவாதத்திற்கு ‘தர்மம்’ ‘மதம்’ என்ற புனிதப் போர்வையை மூடவேண்டியிருந்தது. மற்றும் பௌதீகவாதிகளான பிராமண லௌஹித்திய
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 152, புத்தகங்கள், பெரிய, பக்கம், அவன், கொடுத்து, தன்னுடைய, கங்கை, வால்காவிலிருந்து, சபைகளில், செய்யும், தங்கள், சந்யாசம், அரசர்கள், முறையிலோ, முதலிய, மடம், மடம்’, மிருகாரனின், சிறந்த, அர்ச்சுனனுடைய, சேனைத்