சத்ய சோதனை - பக்கம் 5
அதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இருந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும்; ஏனெனில், சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்குப் பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களைக் கட்டாயம் படித்துவிடுவேன். ஆனால், அவற்றில் அடிக்கடி என் புத்தி செல்லாது. இவ்வாறு பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த ‘சிரவணனின் பிதிர் பக்தி நாடகம்’ ( இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம் ) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்தச் சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்த படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 5, நான், புத்தகங்கள், பக்கம், வேறு, சோதனை, சத்ய, என்றாலும், ஆசிரியரின், கொண்டிருந்த, எனக்குப், சரியாகப், இருந்து, ஏனெனில், கொண்டிருந்தேன், பார்த்துக், பக்கத்துப், சிறந்த, ‘காப்பி’, ஆசிரியர், என்னைத், ஆகையால், தவிர