சத்ய சோதனை - பக்கம் 342
இப் பத்திரிகை சமூகத்திற்கு நல்ல சேவை செய்திருக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நான் உணருகிறேன். லாபத்திற்கு நடத்தும் வர்த்தக ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும் என்ற நோக்கம் என்றும் இருந்ததில்லை. என்னால் நடத்தப்பட்டு வந்தவரையில் அப் பத்திரிகையில் ஏற்பட்ட மாறுதல்கள், என்னிடம் ஏற்பட்ட மாறுதல்களுக்கு அடையாளங்களாக இருந்தன. இப்பொழுது ‘எங் இந்தியா’ வும், ‘நவஜீவ’னும் இருப்பதைப்போல் அந்த நாளில் ‘இந்தியன் ஒப்பீனியன்’ என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டும் கண்ணாடி போல் இருந்து வந்தது. அதன் பத்திகளில் பிரதி வாரமும் என் ஆன்ம உணர்ச்சிகளைக் கொட்டி வந்தேன். சத்தியாக்கிரகக் கொள்கையையும் அதன் அனுஷ்டானத்தையும் நான் அறிந்திருந்த வகையில் அதில் வெளியிட்டு வந்தேன். பத்து வருட காலத்தில், அதாவது 1914-ஆம் ஆண்டு வரையில், சிறைச் சாலைக்குள் எனக்குக் கிடைத்த கட்டாய ஓய்வைத் தவிர மற்றச் சமயங்களில், என்னுடைய கட்டுரை இடம் பெறாத ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழே இல்லை. நான் தீர யோசிக்காமலோ, வேண்டும் என்றே மிகைப்படுத்தியோ, திருப்திப்படுத்துவதற்கு மாத்திரம் என்றோ அக்கட்டுரைகளில் ஒரு வார்த்தையைக்கூட எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. எனக்கு அப்பத்திரிகை தன்னடக்கத்திற்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. நண்பர்களுக்கோ, என் கருத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு அது ஒரு சாதனமாக இருந்தது. குற்றங் கண்டுபிடிப்பவர்களுக்கு, அதில் ஆட்சேபிக்கத் தக்க விஷயங்கள் அதிகம் கிடைப்பதில்லை. உண்மையில் ‘இந்தியன் ஒப்பீனியனி’ன் நேர்மையான போக்கு, குற்றங் கூறுவோரும் தங்கள் பேனாவை அடக்கிக்கொள்ளும்படி செய்தது. ‘இந்தியன் ஒப்பீனியன்’ இல்லாமல் சத்தியாக்கிரகம் சாத்தியமில்லாமலும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 342, நான், புத்தகங்கள், ‘இந்தியன், இல்லை, பக்கம், சத்ய, ஒப்பீனியன்’, எனக்கு, அதில், சோதனை, வந்தேன், குற்றங், ஏற்பட்ட, என்பதை, சிறந்த, இல்லாமல், வரையில், வேண்டும்