சத்ய சோதனை - பக்கம் 246
ராய்ச்சந்திரபாயும் விவாகம் ஆனவரே. அவர் கூறியவை, கொஞ்சம் கடுமையாக இருந்ததாக அப்பொழுது எனக்குத் தோன்றின என்பது என் நினைவு. ஆனால், அவர் கூறியவை என் உள்ளத்தில் மிகவும் ஆழப்பதிந்துவிட்டன. கணவனிடம் மனைவி கொள்ளும் பக்தி விசுவாசத்தைவிட, வேலைக்காரனின் பக்தி, ஆயிரம் மடங்கு போற்றற்கு உரியது என்று நான் எண்ணினேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆகையால் கணவனிடம் மனைவி பக்தி கொள்ளுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தப் பக்தி முற்றிலும் இயற்கையானது. ஆனால், எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே இதற்கு இணையான ஒரு பக்தியை வளர்ப்பதற்கே விசேட முயற்சி அவசியம் ஆகிறது. கவிஞரின் கருத்து எனக்கு மெள்ள மெள்ள விளங்கலாயிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 246, புத்தகங்கள், கிளாட்ஸ்டன், மனைவி, நான், ஸ்ரீ, பக்தி, சத்ய, பக்கம், அப்பொழுது, அவர், சோதனை, பற்றி, மெள்ள, பக்தியை, கூறியவை, கணவனிடம், கொள்ளுவோம், இடையே, அன்பு, கணவரிடம், என்பது, சிறந்த, புகழ்ந்து, பெரிதா, என்றோ, நீங்கள், ஸ்ரீமதி, வைத்துக்