சத்ய சோதனை - பக்கம் 203
“இப் பிரச்னையை நீங்கள் கவனித்து, அதைக் குறித்துப் பத்திரிகையில் விவாதிப்பதே போதும். நான் கேட்பதும், அடைய விரும்புவதும் எங்களுக்கு உரிய நியாயமான உரிமைகளை மாத்திரமே அன்றி வேறு எதையும் அல்ல” என்றேன்.
அன்றைய மீதிப் பொழுதை, ஊரைச்சுற்றிப் பார்ப்பதிலும், திரிவேணி சங்கமத்தின் அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்திப்பதிலும் கழித்தேன். என்னுடைய வேலைத் திட்டத்தைக் குறித்தும் சிந்தித்தேன்.
எதிர்பாராத விதமாக நான் ‘பயோனீர்’ ஆசிரியரைச் சந்தித்துப் பேசியது, தொடர்ந்து நடந்த பல சம்பவங்களுக்கு அடிப்படை ஆயிற்று. இறுதியில் என்னை நேட்டாலில் அடித்துக் கொல்ல முயன்றதில் போய் இது முடிந்தது.
பம்பாயில் தங்காமல் நேரே ராஜ்கோட்டிற்குச் சென்றேன். அங்கே தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து, ஒரு துண்டுப் பிரசுரத்தை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன். அதை எழுதவும் அச்சிடவும் ஒரு மாதம் ஆயிற்று. அதற்குப் பச்சை நிற மேல் அட்டை போடப்பட்டது. ஆகவே அது ‘பச்சைத் துண்டுப் பிரசுரம்’ என்று வழங்கலாயிற்று. அதில், தென்னாப்பிரிக்க இந்தியரின் நிலையைக் குறித்து, வேண்டுமென்றே, அடக்கமாக, குறைத்தே கூறியிருந்தேன். முன்னால் நான் இரு
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 203, நான், புத்தகங்கள், குறித்து, சத்ய, பக்கம், அதில், இந்தியரின், சோதனை, பத்திரிகையில், அதைக், கூறினார், துண்டுப், தென்னாப்பிரிக்க, ஆயிற்று, தாம், சந்தித்துப், ஸ்ரீ, ‘பயோனீர்’, சிறந்த, என்றும், அறிந்து, ஆகவே, எனக்கு, என்னை