சத்ய சோதனை - பக்கம் 194
ஆனால், அவன் தாயாரோ அப்படியே திகைத்துப் போய்விட்டார். அது எனக்கு எச்சரிக்கையாக இருந்தது. என் பேச்சை நிறுத்தி, வேறு விஷயத்தைக் குறித்து பேச ஆரம்பித்தேன். வழக்கம் போல் அடுத்தவாரம் அவ்வீட்டுக்குப் போனேன். நடுக்கத்தோடுதான் போனேன். அங்கே போகாமல் இருந்து விட வேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை. அப்படியே போகாது நின்றுவிடுவது சரி என்றும் எனக்குப் படவில்லை. ஆனால் அந்த நல்ல பெண்மணி எனக்கு வழியை எளிதாக்கி விட்டார்.
அவர் கூறியதாவது: “ஸ்ரீ காந்தி! உம்முடைய சகவாசம் என் பையனுக்கு நன்மையானதாகாது என்று நான் உங்களுக்குச் சொல்லிவிட வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்ல நேர்ந்ததற்காகத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் அவன் மாமிசம் சாப்பிடத் தயங்குகிறான். உங்கள் வாதத்தை நினைவு படுத்திப் பழமே வேண்டும் என்கிறான். காரியம் மிஞ்சி விட்டது. அவன் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் அவன் நோயுறாவிட்டாலும் அவன் இளைத்தாவது போவான். இதை நான் எப்படிச் சகிப்பது? இனிமேல் உங்களுடைய வாதங்களெல்லாம் பெரியவர்களாகிய எங்களிடம் மட்டும் இருக்கட்டும். அந்த வாதங்களினால் குழந்தைகள் கெட்டுப் போவது நிச்சயம்.”
நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அம்மா! நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. ஆகையால், தாய் என்ற வகையில் உங்களுடைய உணர்ச்சிகளை நான் அறிகிறேன். இத்தகைய வருந்தத்தக்க நிலைமையை நாம் எளிதில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும். நான் வாயால் சொல்வதை விட நான் எதைச் சாப்பிடுகிறேன், எதைச் சாப்பிடாமல் ஒதுக்குகிறேன் என்பதைப் பார்ப்பது, குழந்தையின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 194, நான், அவன், புத்தகங்கள், பக்கம், சோதனை, சத்ய, அந்த, எதைச், போனேன், எனக்கு, குழந்தைகள், வேண்டும், அப்படியே, மாமிசம், என்றும், உங்களுடைய, தட்டில், இவ்விதம், அன்பு, சிறந்த, நல்ல, விட்டது, ஆப்பிள், இருந்த, நிறுத்தி, விட்டான்