சத்ய சோதனை - பக்கம் 129
ஆகவே, என்னைக் ‘கூலி பாரிஸ்டர்’ என்றே அழைத்தார்கள். வர்த்தகர்களும், ‘கூலி வர்த்தகர்கள்’ என்றே அழைக்கப்பட்டனர். இவ்விதம், ‘கூலி’ என்ற சொல்லுக்கு உரிய உண்மைப் பொருள் மறைந்துபோய், அது எல்லா இந்தியருக்கும் ஓர் அடைமொழி ஆகிவிட்டது. இவ்விதம் அழைக்கப்படுவதைக்கேட்டு, முஸ்லிம் வர்த்தகர் ஆத்திரம் அடைவார். ‘நான் கூலியல்ல, அராபியன்!” என்பார். அல்லது, ‘நான் ஒரு வியாபாரி’ என்பார். ஆங்கிலேயர் மரியாதை தெரிந்தவராக இருந்தால், தாம் தவறாக அழைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவார்.
தலைப்பாகை வைத்துக்கொள்ளும் விஷயம் இந்த நிலைமையில் மிகமுக்கியமான ஒன்றாக ஆயிற்று. பிறர் உத்தரவிடுகிறார்கள் என்பதற்காக ஒருவர், தமது இந்தியத் தலைப்பாகையைக் கழற்றிவிடுவது என்பது அவமதிப்புக்கு உடன்படுவதாக ஆகும். ஆகவே, இந்தியத் தலைப்பாகையை அணிவதை அடியோடு விட்டுவிட்டு,ஆங்கிலத் தொப்பி போட்டுக்கொள்ளுவதே மேல் என்று நினைத்தேன். அப்படிச் செய்துவிட்டால் அவமதிப்பிலிருந்தும், விரும்பத்தகாத விவாதங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் கருதினேன்.
ஆனால், இக்கருத்தை அப்துல்லா சேத் ஒப்புக்கொள்ளவில்லை. “நீங்கள் அவ்விதம் ஏதாவது செய்வீர்களானால் அதனால் பெருந்தீங்கே விளையும். இந்தியத் தலைப்பாகையை அணிந்தே தீருவோம் என்று வற்புறுத்தி வருபவர்களை நீங்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 129, ‘சாமி’, புத்தகங்கள், பொருள், சத்ய, ‘எஜமான்’, பக்கம், என்பார், இந்தியத், என்பது, என்றே, சோதனை, ஆகவே, சிறந்த, ‘கூலி, ‘நான், தலைப்பாகையை, இருந்தால், இவ்விதம், ஆத்திரம், அழைக்கப்பட்டனர், அல்லது, ‘கூலிகள்’, ஆங்கிலேயர்கள், ஆங்கிலேயர், ஆகையால், எல்லா