சத்ய சோதனை - பக்கம் 118
உடனே அவருடைய சிப்பாயின் மூலம், எனக்கு பின் கண்டபதிலும் கிடைத்தது: “நீர் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டீர். போய்விடுமாறு நான் உம்மிடம் கூறியும், நீர் போகவில்லை. உம்மை வெளியே அனுப்புமாறு என் சேவகனுக்கு உத்தரவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. வெளியே போகுமாறு அவன் சொன்னதற்கும் நீர் போக மறுத்தீர். ஆகவே, உம்மை வெளியே அனுப்புவதற்குப் போதுமான பலாத்காரத்தை அவன் உபயோகிக்க வேண்டியதாயிற்று. உமது விருப்பம்போல் எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் நீர் எடுத்துக் கொள்ளலாம்.”
இந்தப் பதிலை என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, இடிந்துபோய் வீடு திரும்பினேன். நடந்ததையெல்லாம் என் அண்ணனிடம் சொன்னேன்; அவரும் வருத்தப்பட்டார். ஆனால், என்னைத் தேற்றுவது எப்படி என்பது அவருக்குத் தெரியவில்லை. துரைமீது எப்படி வழக்குத் தொடருவது என்பது எனக்குத் தெரியாது போகவே, அவர் தமது வக்கீல் நண்பர்களிடம் இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்தார். அச் சமயத்தில் ஸர் பிரோஸ்ஷா மேத்தா ராஜ்கோட்டில் இருந்தார். ஏதோ ஒரு வழக்குக்காக அவர் அங்கே வந்திருந்தார். ஆனால், என்னைப் போன்ற ஒரு சின்ன பாரிஸ்டர் அவரைப் போய்ப் பார்க்க எவ்வாறு துணிய முடியும்? அவரை அங்கே ஒரு வழக்கிற்கு அமர்த்தியிருந்த ஒரு வக்கீலின் மூலம் என் வழக்குச் சம்பந்தமான தஸ்தாவேஜூக்களை அனுப்பி, அவருடைய ஆலோசனையைக் கோரினேன். அவற்றைப் பார்த்துவிட்டு, அவர் பின்வருமாறு கூறினாராம் : “ அநேக வக்கீல்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் இது சாதாரணமான அனுபவம் என்று காந்தியிடம் கூறுங்கள். அவர் இப்பொழுதுதான் இங்கிலாந்திலிருந்து வந்திருக்கிறார். ஆகையால், அவருக்கு ரோஷம் அதிகமாக இருக்கிறது. பிரிட்டிஷ் அதிகாரிகளைக் குறித்து, அவருக்கு இன்னும் தெரியவில்லை. அவர் இங்கே ஏதோ கொஞ்சம் சம்பாதித்துச் சௌக்கியமாக வாழ விரும்பினால், அக் குறிப்பைக் கிழித்தெறிந்து விட்டு, அவமானத்தையும் சகித்துக்கொள்ளட்டும். துரை மீது வழக்குத் தொடுத்து அவர் அடையப்போவது எதுவும் இல்லை. அதற்கு மாறாக, தம்மையே நாசப்படுத்திக்கொண்டதாகவும் அது
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 118, அவர், புத்தகங்கள், பக்கம், வெளியே, அவருக்கு, நீர், வழக்குத், சத்ய, சோதனை, அவன், எப்படி, தெரியவில்லை, அங்கே, உம்மை, என்பது, சிறந்த, மீது, நான், என்னைத், உடனே, அவருடைய, எனக்கு, மூலம், உங்கள்