சத்ய சோதனை - பக்கம் 112
அந்தச் சமயத்தில், மமிபாய் என்ற ஒருவரின் வழக்கை நடத்துவதற்கு எடுத்துக்கொண்டேன். அது, ஸ்மால்காஸ் வழக்கு. அந்த வழக்கைக் கொண்டுவந்து கொடுத்த தரகருக்கு ஏதாவது கொஞ்சம் தரகுப் பணம் தர வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிக் கொடுப்பதற்கு நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன்.
“மாதம் மூவாயிரம், நாலாயிரம் சம்பாதிக்கும் பெரிய கிரிமினல் வக்கீலான இன்னார் கூடத் தரகு கொடுக்கிறாரே!” என்றார்கள்.
“அவரை நான் பின்பற்ற வேண்டியதில்லை என்றேன்.எனக்கு மாதம் ரூ.300 கிடைத்தாலே போதும். என் தந்தை அதற்கு மேல் சம்பாதிக்கவில்லை” என்றும் கூறினேன்.
“அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது பம்பாயில், பயப்பட வேண்டிய அளவுக்குச் செலவுகள் கூடிவிட்டன. ஆகையால், நீர் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
நான் பிடிவதமாக இருந்துவிட்டேன். தரகுப் பணம் கொடுக்கவில்லை என்றாலும், மமிபாயின் வழக்கு என்னிடம் வந்தது. அது மிகவும் சுலபமான வழக்கு. எனக்கு ரூபாய் 30 கட்டணம் கொடுக்க வேண்டும் என்றேன். கோர்ட்டில் அந்த வழக்கு, ஒரு நாளுக்கு மேல் நடக்கும் என்று தோன்றவில்லை.
ஸ்மால்காஸ் கோர்ட்டில் நான் ஆஜராவது அதுவே முதல் தடவை. நான் பிரதிவாதிக்காக ஆஜரானதால் வாதியின் சாட்சிகளை நான் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அதற்காக எழுந்தேன். ஆனால், என் தைரியமெல்லாம் போய், தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. கோர்ட்டு முழுவதுமே சுழலுவதாக என்குத் தோன்றிற்று. குறுக்கு விசாரணை செய்ய ஒரு கேள்விகூட என் சிந்தனையில் எழவில்லை. நீதிபதி சிரித்திருப்பார்; வக்கீல்களும் அக் காட்சியை ரசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நானோ, இதில் எதையும் காணும் நிலையில் இல்லை. பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். ‘இந்த வழக்கை நடத்த என்னால் முடியாது. பட்டேலை அமர்த்திக்கொள்ளலாம். எனக்குக் கொடுத்த கட்டணத்தையும் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்று ஏஜெண்டிடம் சொன்னேன். ரூ.51 கட்டணம் கொடுப்பதெனப் பேசி, ஸ்ரீ பட்டேல் வக்கீலாக அமர்த்தப்பட்டார். அவருக்கோ இந்த வழக்கு,
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 112, நான், புத்தகங்கள், வழக்கு, வேண்டும், எனக்கு, பக்கம், சத்ய, வழக்கை, சோதனை, இல்லை, கட்டணம், மேல், கோர்ட்டில், என்றேன், செய்ய, விசாரணை, குறுக்கு, அந்த, ஸ்மால்காஸ், சிறந்த, கொடுத்த, தரகுப், பணம், என்றார்கள்