புறநானூறு - 158. உள்ளி வந்தெனன் யானே!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை; பாடாண்.
துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம்.
சிறப்பு : எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு.
முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும், அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக், கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும் பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்; |
5 |
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த, மாரி ஈகை, மறப்போர் மலையனும்; ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல், கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்; ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை, |
10 |
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப், பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று உள்ளி வருநர் உலைவுநனி தீரத், தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக், |
15 |
கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப் பாடி வருநரும் பிறருங் கூடி இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண் உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக் |
20 |
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி, ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, முட்புற முதுகனி பெற்ற கடுவன் துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
25 |
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண! இசைமேந் தோன்றிய வண்மையொடு, பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே! |
பாரி: சங்கும் முரசும் முழங்க முற்றுயிட்ட அரசரோடு போரிட்ட பறம்புமலை அரசன் ஓரி: கொல்லிமலை அரசன் மலையன்: கருங்குதிரை மேல் வந்து போரிட்டு வென்றவன். மழை போல் வழங்கும் கொடையாளி (காரி) எழினி: கூர்மையான வேல்வீரன். கூவிளம் பூ மாலை அணிந்தவன் பேகன்: கடவுள் (பழனிமுருகன்) காக்கும் குகையை உடைய பெருங்கல்-மலை நாட்டு அரசன். ஆய்: மோசிக்கீரனாரால் பாடிப் போற்றப்பட்டவன். நள்ளி: பகைவர்களை ஓடச்செய்த்தோடு, ஆர்வத்தோடு வருவோரின் அல்லலைப் போக்க மறுக்காமல் வழங்கியவன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 158. உள்ளி வந்தெனன் யானே!, உள்ளி, யானே, இலக்கியங்கள், அரசன், வந்தெனன், புறநானூறு, கடவுள், காக்கும், பெருங்கல், சிலம்பின், எழுவர், எட்டுத்தொகை, சங்க, காரி, ஏந்திய