பரிபாடல் - 5. செவ்வேள்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: கண்ணனாகனார்
பண் :: பாலையாழ்
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு, சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி, தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து, நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து, வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய |
5 |
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல், நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை, குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து, மலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை! |
10 |
வேலனது வெறிப்பாட்டு
மூ-இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை! காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்! சால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள், வேலன் ஏத்தும் வெறியும் உளவே; |
15 |
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல, நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்; சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்பு ஆகலும், பிறப்பினுள் இழிபு ஆகலும், |
20 |
ஏனோர் நின் வலத்தினதே; |
முருகப் பிரானின் பிறப்பு
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ, வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து, நாகம் நாணா, மலை வில்லாக, மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, |
25 |
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் உமையொடு புணர்ந்து, காம வதுவையுள், அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு, |
30 |
விலங்கு என, விண்னோர் வேள்வி முதல்வன் விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின், எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள; |
35 |
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து, வசித்ததைக் கண்டம் ஆக மாதவர், மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின், சாலார்; தானே தரிக்க என, அவர் அவி |
40 |
உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித் தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில், வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள் கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய, அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்; |
45 |
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழா அது நிற் சூலினரே; நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப் பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்; பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, |
50 |
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன், எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென, அறு வேறு துணியும் அறுவர் ஆகி, ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்! |
தேவர் சேனைக்குத் தலைவனாதல்
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய | 55 |
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய, அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து, செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத் திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; |
60 |
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து, இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்; ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும், பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், |
65 |
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும் தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும், வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு, மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன் பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். |
70 |
முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை, மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை- செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும், சேரா அறத்துச் சீர் இலோரும், அழி தவப் படிவத்து அயரியோரும், |
75 |
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார் நின் நிழல்; |
முருகப் பெருமானிடம் வேண்டுதல்
அன்னோர் அல்லது இன்னோர் சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும்- உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! |
81 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல் - 5. செவ்வேள், இலக்கியங்கள், கொண்டு, செவ்வேள், அல்ல, ஆதலின், நின், மாதவர், அழல், வேறு, கொடுத்தோன், பரிபாடல், மெய்யின், நிறைவயின், மனைவியர், அல்லதை, குணம், அறுவர், கொண்டோர், ஓங்கு, நிற், அமர்ந்து, பொறி, முருகப், ஊர்ந்து, அமர், சேய், சங்க, எட்டுத்தொகை, பொழில், பெயர், பிறப்பு, அமரர், ஆகலும், சேஎய், கயந்தலை, அரிது