பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி முனைவேன் முருக னெனவிவர் முதலிய திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த சங்கமென்னுந் துங்கமலி கடலுள் அரிதி னெழுந்த பரிபாட் டமுதம் |
5 |
அரசுநிலை திரீஇய வளப்பருங் காலம் கோதில் சொன்மக ணோதகக் கிடத்தலிற் பாடிய சான்றவர் பீடுநன் குணர மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற் றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் |
10 |
எழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடம் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற் சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற |
15 |
மதியின் றகைப்பு விதியுளி யகற்றி எல்லையில் சிறப்பிற் றெல்லோர் பாடிய அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச் சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன் நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற் பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே |
21 |
நேரிசை வெண்பா
விரும்பி யருணீல வெற்பிமயக் குன்றின் வரும்பரிசு புள்ளுரு மாலே - சுரும்பு வரிபாட லின்சீர் வளர்துளவந் தோளாய் பரிபாட லின்சீர்ப் பயன். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம், இலக்கியங்கள், உரைச்சிறப்புப், பரிபாடல், பாயிரம், பிழைப்பும், பாடிய, எட்டுத்தொகை, சங்க