நற்றிணை - 65. குறிஞ்சி
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!- கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ, ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து, புலியொடு பொருத புண் கூர் யானை |
5 |
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் விற் சுழிப்பட்ட நாமப் பூசல் உருமிடைக் கடி இடி கரையும் பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே. |
விட்டு விட்டுக் கரைத்துச் செல்லுதலையுடைய கான்யாற்றின்கண்ணே கலங்கும் பாசியை நீர் அலைத்தலானே அவை யாண்டும் கலப்ப; விளங்கிய வெள்ளிய அருவியினது ஒள்ளிய துறையின் கண்ணே பாய்ந்து; புலியுடனே போர்செய்தலானாகிய புண்மிக்க யானையின் நல்ல தந்தத்தை விரும்பிய அன்பற்ற வேடரின்; வில்லினின்றுவிடும் அம்புபட்டதனாலாகிய சுழன்ற அச்சத்தைத் தருகின்ற பிளிற்றலின் பேரொலியானது இடியிலுண்டாகு மிக்க முழக்கத்தைப் போல ஒலிக்கும்; பெரிய மலை நாடன் குறித்த பருவத்து வாராமையால் அவனை நாம் கருதியிருக்கும்பொழுது நம் அயல் வீட்டு மாதொருத்தி வேறொருத்தியிடம் உரையாடுகின்றவள் நமக்கு நன்னிமித்தமாகக் கிடங்கில் என்னும் ஊர் போன்ற சிறந்த இனிய சொல்லால் 'அவன் இன்னே வருகுவன்' எனக் கூறினள் காண்; அவ்வார்த்தை அசரீரியெனப் படுதலால் நம்மலை நாடன் இன்னே வரும் என யான் கருதுகின்றேன் நீ வருந்தாதேகொள் !; இங்ஙனம் நமக்கு நன்னிமித்தமாகக் கூறிய அவ் வயல்வீட்டு மாது தேவருணவாகிய அமுதத்தினை ஈண்டுக் கைவரப் பெற்று இப்பொழுதே உண்பாளாக !;
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 65. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, நாடன், நமக்கு, நன்னிமித்தமாகக், இன்னே, நீர், கிடங்கில், எட்டுத்தொகை, சங்க, அயல், கலங்கும்