நற்றிணை - 49. நெய்தல்

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
5 |
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச் சென்று நாம் அறியின், எவனோ- தோழி! மன்றப் புன்னை மாச் சினை நறு வீ முன்றில் தாழையொடு கமழும் தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? |
10 |
தோழீ ! பரதவர் முனறிலின்கணுள்ள பலர் கூடுகின்ற மன்றம் போல் அமைந்த புன்னையின் கரிய கிளைகளிலுள்ள நறிய மலர் அயலிலுள்ள தாழை மடலோடு கூடி நறுமணம் வீசாநிற்கும் தௌ¤ந்த கடற்றுறைவன; வாழ்கின்ற சிறிய நல்ல ஊரின்கட் சென்று; அவன்பால் கடலிலுள்ள பெரிய அலைகளாலே கொழிக்கப்பட்ட பால் போலும் வெளிய நிறத்தையுடைய எக்கராகிய மணல் மேட்டில் விளையாட்டயரும் வளையுடைக் கையராய பரத்தியர் யாவரும் தத்தம் மனையகத்துத் துயில்கின்றமையாலே துறை தனிமையுடையதாயிராநின்றது; முடியிட்ட வலையால் முகக்கப்பட்ட முடங்குதலையுடைய பாவை போன்ற இறாமீன்களைக் காயவிட்டு அவற்றில் வந்து விழுகின்ற காக்கைகளை ஓப்புதலானே பகற்பொழுது கழிந்துவிட்டது; எம்முடைய ஐயன்மாரும் திரண்ட கோடுகளையுடைய சுறா முதலிய மீன்களைப் பிடித்தலானாகிய உவகையராய்ப் பின்னும் வேட்டைமேற் செல்லாதொழித்துத் தம்தம் மனையகத்தே தங்கிவிட்டனர்காண்; யாமும் நீ இல்லாமையால் மயக்கமுடையேமாய் இராநின்றேம் என்று கூறி அவன் கருத்தை ஆராய்ந்தறியின்; அதனா லேதேனும் குற்றப்பாடுளதோ? உளதாயிற் கூறிக்காண்;
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம். - நெய்தல் தத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 49. நெய்தல், நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, தோழி, சென்று, துறை, பால், சங்க, எட்டுத்தொகை