நற்றிணை - 41. பாலை
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த வெண் புறக் களரி விடு நீறு ஆடி, சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் பாஅர் மலி சிறு கூவலின் தணியும் நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- |
5 |
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு, கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி, சிறு நுண் பல் வியர் பொறித்த குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. |
10 |
விளங்கிய கலன் அணிந்த அரிவையே; இரவின்கண் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர் உண்ணவேண்டி; நீ நெய்யை அளாவவிட்டுக் கொழுவிய தசையைச் சமைத்ததனாலாகிய புகைபடிந்த நெற்றியின்கண் சிறிய நுண்ணிய பலவாய வியர்வை நீர் தோன்றப் பெற்ற; குறுகிய நடையொடு சென்ற நின் புணர்ச்சியை அக்காலத்து விரும்பினவர்; பசிய கண்களையுடைய யானை தன் பருத்த காலால் உதைத்தலிற் பொடிபட்ட வெளிய மேலிடத்தையுடைய பாழ்நிலத்திலுள்ள விடு புழுதி மூழ்கப்பெற்று; சுரத்தின்கண் வந்து வருந்திய வருத்தமெல்லாம்; மெல்ல நடந்து பருத்திகள் சூழ முளைத்திருக்கின்ற சிறிய கிணற்றிற் சென்று தணித்துக் கொள்ளா நிற்கும்; நெடிய மிக்க சேணிடத்தேகி வருந்தாநிற்பர் போலும்; அங்ஙனம் போய் வருந்துவதும் பின்னர் நின்னொடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டு அன்றோ? இதனை ஆராயாது வருந்துவது என்னை ?
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது. - இளந்தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 41. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, சென்று, வந்த, சிறிய, சிறு, விடு, எட்டுத்தொகை, சங்க, வருந்திய