நற்றிணை - 37. பாலை

பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணி பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று இவளொடும் செலினோ நன்றே; குவளை நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
5 |
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் ஆகுவது அன்று, இவள் அவலம்- நாகத்து அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
10 |
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. |
ஒன்றோடொன்று சிக்குண்ட சிறுதூறுகளும் பழைமையான நல்ல தோற்றமும் வாடிய அகன்ற இடத்தையுடைய; உணவின்றி வாட்டமுற்ற நிரையிலுள்ள ஓராவினது தௌ¤ந்த மணியோசை மெல்லென வந்து ஒலியாநிற்கும் அத்தத்தில்; நீயிர் பொருள் நசையாற் செல்லுகின்ற இப்பொழுது கூரிய பற்களையுடைய இவளோடுஞ் செல்வீராயின் அது மிக நல்லதொரு காரியமாகும்; அங்ஙனமின்றிக் கலைமானைப் பிரிந்த பெண் மான் போல இவள் கலக்க முற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர்போன்ற கண்களில் அழுகின்ற நீர்வடிய; மாறுபட்டு அன்பில்லாதீராய் நீயிர் இவளைப் பிரிந்து செல்லுவீராயின்; பாம்பினது வருத்துகின்ற அரிய தலை துணிந்து விழும்படி சினந்து; வலமாக எழுந்து மிக்க முழக்கத்தையுடைய நல்ல இடியேறு குமுறித் திரியாநின்ற முகில் சூழ்ந்துலாவுங் கார்ப்பருவத்து மாலைக் காலம் வரும்பொழுது இவள் அவலம் என்பரம் ஆகுவது அன்று இவள் படுகின்ற அவலம் என்னாலே தாங்கப்படுவ தொன்றன்று காண்மின்;
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது. - பேரி சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 37. பாலை, இலக்கியங்கள், இவள், நற்றிணை, பாலை, அவலம், நல்ல, நீயிர், அன்று, நீர், எட்டுத்தொகை, சங்க, வாடிய, ஆகுவது