நற்றிணை - 35. நெய்தல்
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
5 |
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; உழையின் போகாது அளிப்பினும், சிறிய ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?- மகிழ்ந்தோர் |
10 |
கள்களி செருக்கத்து அன்ன காமம்கொல்?- இவள் கண் பசந்ததுவே! |
பொங்கி எழுகின்ற அலைமோதிய நேரிதாகிய மணல் அடுத்த கடற்கரையின் கண்ணே உதிர்ந்த புல்லிய காம்பையுடைய நாவலின் களி பொருந்திய புறத்தினையுடைய கரிய கனியை; தம்மினமென்று கருதி மொய்த்த வண்டுகள்; அதனைக் கனியென வோர்ந்து பலவாகிய கால்களையுடைய ஞெண்டு கைக்கொண்ட கோட்பாட்டினால் அஞ்ஞெண்டை விலக்கித் தாம் வலிந்து கொள்ளப்படாதனவாய் யாழோசைபோல மிக்கு ஒலிக்கும் பெரும் பூசலை; ஆண்டு இரையைத் தேடுகின்ற நாரை வரக்கண்ட ஞெண்டு கைவிட்டகலா நிற்கும் கடற்றுறை விளங்கிய மாந்தை போன்ற இவளுடைய நலமானது; பண்டும் இத்தன்மையதேயாகும் நீ காண்பாயாக !; இவள்பானின்றும் களவுக் காலத்து விலகாமலிருந்து தலையளி செய்தாலும்; இவள் பசப்புற்றதன் காரணம் சிறிதளவு முயக்கம் கை நெகிழ்ந்ததனாற் கெட்ட அழகின் மிகுதியோ?; கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போன்ற காம வேறுபாடோ? அவ்விரண்டுமல்லவே;
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 35. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, இவள், அன்ன, பண்டும், ஞெண்டு, மாந்தை, மொய்த்த, எட்டுத்தொகை, சங்க, கால், நாரை