நற்றிணை - 341. குறிஞ்சி

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின், செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து, அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக் குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் |
5 |
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென, நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு வேறு புல வாடை அலைப்ப, துணை இலேம், தமியேம், பாசறையேமே. |
10 |
இங்கு ஒரு குன்றின்மேற் காணப்படு மடந்தை வெள்ளி போன்ற வரிகளையுடைய கற்பாறையிலே விழும் அருவியாடி அதிற் சிறிது வெறுப்படையின்; சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டைச் சாடியின்வாயில் வைத்து அதன் நாவினால் காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளின் தௌ¤வை (சாராயத்தை)ப் பருகி; அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து மரக்கொம்பினையொடித்து ஓங்கிக் காட்டிச் சில வார்த்தையைக் கூறி; குன்றகத்துள்ள தன் காதலனாகிய குறவனொடு சிறிய நொடி பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; இங்ஙனம் எம்மோடு எம் காதலி கள்ளின் தௌ¤வைப் பருகிக் குறு நொடி பயிற்றி மகிழாவாறு யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் நாட்காலையிலே; கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்;
வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 341. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நொடி, நற்றிணை, மயங்கி, கூதிரொடு, கள்ளின், மடந்தை, குறு, எட்டுத்தொகை, சங்க, குறவனொடு, துணை