நற்றிணை - 338. நெய்தல்

கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; 'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப |
5 |
யாங்ஙனம் விடுமோ மற்றே!- மால் கொள வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, |
10 |
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? |
கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள் ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; அகன்ற கா¤ய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, 'நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும்' என்று கூறாநின்றனை; இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ?
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 338. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, என்னை, யான், வண்ணம், கண்ணே, எழுந்து, எட்டுத்தொகை, சங்க, புலவு