நற்றிணை - 263. நெய்தல்

பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின் இறை வரை நில்லா வளையும், மறையாது ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு, கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, |
5 |
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு, முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக் கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு, உரைத்த- தோழி!- உண்கண் நீரே. |
10 |
தோழீ! பிறைபோன்ற அழகெல்லாம் இழந்த நினது நெற்றியையும் முன்கையளவினில்லாது கழலும் வளையையும்; மறைந்தேனுங் கூறாது நேராக வந்து ஊரார் அலர் தூற்றும் பழிச்சொல்லையும்; சொல்லவேண்டிய நங்காதலனுக்கு நாம் நாணமேலீட்டினால் சொல்லாதொழிந்தோ மெனினும்; இரையை விரும்பி நிறைந்த சூலுடைமையின் இயங்கமாட்டா வருத்தத்தினாலே நெய்தனிலத்தின்கண்ணதாகிய கழியை அடையாமல் மருதநிலத்தின்கண்ணதாகிய கழனியிலே தங்கியிருந்த வளைந்த வாயையுடைய பேடைநாரைக்கு, முடம் முதி¢ர் நாரை கடல் மீன் ஒய்யும் முடம் முதிர்ந்த நாரைப் போத்துக் கடலின் மீனைக் கொண்டுபோய்க் கொடாநிற்கும்; மெல்லிய கடற்கரைத் தலைவனைக் கண்டு; பலகால் நாம் மறைக்கவும் மறைக்கவும் நிலைகொள்ளாமல் அளவு கடந்து; மையுண்ட நம்முடைய கண்களின் நீரே வெளிவந்து உரை செய்துவிட்டன; யாம் யாது செய்யவல்லேம்!
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது. - இளவெயினனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 263. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, கரப்பவும், கண்டு, தோழி, நாம், மறைக்கவும், முடம், ஒய்யும், நீரே, கடல், சங்க, எட்டுத்தொகை, இழந்த, அலர், நாரை, தூற்றும், மீன்