நற்றிணை - 256. பாலை

நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி, அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை; காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த, புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே; இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் |
5 |
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ, கார் பெயல் செய்த காமர் காலை, மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த கண் கவர் வரி நிழல் வதியும் |
10 |
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே. |
நீதான் புலவராலே பாடுதற்கமைந்த குற்றமற்ற அழகிய சிறிய அடிகளுடனே பல்கிய பெரிய அழகு அமைந்த அமர்த்த கண்ணையுடையையாயிரா நின்றனை; காடுகளோ தீப்பற்றிய மரங்களையுடையனவாதலின் நிழலும் அழகும் நீங்கி ஒழிந்தன; அவ் வண்ணம் ஒழிதலும் தனிமை நிலைபெற்றிருத்தலினால் நன்மைகளெல்லாம் ஒருங்கே சிதைவுற்றன; இத் தன்மையாகிய நிலைமையினால் நின்னை உடன்கொண்டு சேறல் இயையாமையின் நின்னுடன் செல்லுதலைத் தவிர்ந்தனம்; அன்றிக் கூரிய நுனியையுடைய களாவின்மலர் ஒருங்கே மலர்ந்து மணங்கமழாநிற்பப் பிடாமலர் முறுக்குவாய் நெகிழ்ந்து மலர மேகந் தான் செய்ய வேண்டிய மழை பெய்தலைச் செய்யத் தொடங்கிய அழகிய கார்ப்பருவத்தில்; இளையபிணைமானைப் புணர்ந்த கரிய பிடரினை யுடைய கலைமான்; உள்ளே வயிர முற்றிய வேல மரத்தின் தாழ்ந்த கிளையினாற் பல்கிய காண்போர் கண்ணைக் கவர்ந்து கொள்ளும் வரி பொருந்திய நிழலிலே தங்கியிருக்கும்; குளிர்ச்சியுற்ற காட்டின் கண்ணே செல்லுவதனையும் தவிர்ந்தனம், ஆக இருவகைக் காலத்தும் நின்னைப் பிரியாதிருக்க நீ வருந்துவதென்னை? வருந்தாதே கொள்!
'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 256. பாலை, தவிர்ந்தனம், பாலை, இலக்கியங்கள், நற்றிணை, கொள், ஒருங்கே, அழகிய, செலவே, பல்கிய, நிழல், எட்டுத்தொகை, சங்க, அமர்த்த, கவர்