நற்றிணை - 218. நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும் நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்; ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌத்தோர் |
5 |
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய பராரை வேம்பின் படு சினை இருந்த குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்; ஆனா நோய் அட வருந்தி, இன்னும் தமியேன் கேட்குவென் கொல்லோ, |
10 |
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே? |
ஆதித்த மண்டிலம் மேலைத் திசையிலிறங்கிக் கதிரும் மழுக்கம் அடைந்தது. இராப்பொழு தென்பதும் பூவுதிர்ந்த கொடிபோல ஞாயிற்றை யிழந்து தனித்துப் பொலிவு குன்றாநின்றது; இடங்கள் தோறும் வெளவாலும் பறந்து உலவாநிற்கும்; ஆந்தையின் சேவலும் மகிழ்ச்சி மிகப்பெற்றுத் தான் நகைக்குந் தோறும் தன் பெடையை அழையாநிற்கும்; இவையேயுமன்றித் தீராத ஆசையுடனே நெறிப்பட என்னைத் தேற்றிய காதலர் கூறிய பருவமும் மெல்ல மெல்லச் செல்லாநின்றது; இடையிடையே நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் பெரிய கிளையிலிருந்த குராலாகிய கூகையும் இரவுமுழுதும் குழறா நிற்கும்; இத்தகைய இரவிலே தீராத காமநோய் துன்புறுத்துதலாலே வருத்தமடைந்து இத்துணைநாளும் வருந்தியதன்றி இன்னும் தமியளாயிருந்து; பருத்த அடியையுடைய பனைமடலிலே இருக்கும் அன்றிலின் குரலையுங் கேட்டு மாழ்குவேனோ? எவ்வண்ணம் இதனை ஆற்றியிருப்பேன்?
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில். - காவிதிக் கீரங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 218. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், தோறும், தீராத, பருத்த, அடியையுடைய, இன்னும், கூறிய, எட்டுத்தொகை, சங்க, சேவலும், வேம்பின், கூகையும்