நற்றிணை - 207. நெய்தல்
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி |
5 |
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் |
10 |
திரை எழு பௌவம் முன்னிய கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. |
அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய ; கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்¢காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம்¢ வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; இரவில் இளைஞரும் முதியோரும் தம்¢ உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்?
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 207. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, சுருங்கிய, பரதவர், கொண்டு, கொள்பவர், கண்டல், எட்டுத்தொகை, சங்க, வேய்ந்த, மீன்