நற்றிணை - 203. நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங் கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, |
5 |
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது, கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச் செய்த தன் தப்பல் அன்றியும், |
10 |
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
ஒலிக்கின்ற அலைகொழித்த பெரிய மணலானாகிய திடரின்கணுள்ள வளைந்த அடியையுடைய தாழையின் ; முள்ளையுடைய நெடிய தொகுதியாகிய இலையின் உள்மடலிலே தோன்றிய ; அரும்புமுதிர்ந்த வெளிய பொலிவு பெற்ற சங்கினை நீட்டித்து வைத்தாலொத்த வெளிய பூவையுடைய தாழை ; எறிகின்ற அலை மோதுதலாலே பொங்கித் தாது உதிர்ந்து; சிறிய குடியையுடைய பாக்கத்துத் தெருவிலெழுகின்ற புலவுநாற்றத்தைப் போக்காநிற்கும்¢ மணங் கமழ்கின்ற கடலருகிலுள்ள சோலையின் கண்ணே; காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும் உயிருய்தல் அரிதாகுமென்று கருதாமல்; விரைந்த செலவினையுடைய குதிரைப்பூட்டிய அவரது நெடிய தேரின் வருகையை இனி அக் கானலிடத்து வாராது அலரால் மறிக்கப்பட்டு வருந்தச் செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டா திருப்பதன்றியும்; இப் பழிமொழியாகிய பேரிரைச்சலையுடைய ஊரானது இங்ஙனம் ஒருதேர் வருவதன்காரணந்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது; இஃதென்ன கொடுமையுடையது காண்? இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழாநிற்குமன்!;
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 203. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், தாழை, நற்றிணை, செய்த, நெடிய, வெளிய, தாது, நெடுந், எட்டுத்தொகை, திரை, சங்க, பொங்கித்