நற்றிணை - 18. பாலை
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல வருவர் வாழி- தோழி!- மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல் தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, |
5 |
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் திரை தபு கடலின் இனிது கண் படுப்ப, கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. |
10 |
தோழீ ! நெடுங்காலம் வாழ்வாயாக!; மூவனென்பவனைப் போரில் வென்று அவனது நிரம்பிய வலியையுடைய முட்போன்ற பற்களைப் பிடுங்கிக் கொணர்ந்துவைத் திழைத்த வாயிற் கதவினையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனாகிய; வெல்லும் வேற்படையையுடைய பகைவராற் கடத்தற்கரிய சேனையையுடைய சேரலன்கணைக்காலிரும் பொறையானது; பாசறையின் கண்ணேயுள்ள நெஞ்சு நடுங்குகையாலே கண்ணுறங்காத வீரர் யாவரும்; அலையோய்ந்த கடல்போல இனி தாகக் கண்ணுறங்குமாறு; மதநீரொழிந்த சினந்தணிந்த யானையின் பெரிதாய் நிலைத்துள்ள ஒரு மருப்புப்போன்ற; ஒன்றாகி விளங்கிய அருவியையுடைய மலைநெறியிற் சென்ற தலைவர்; நீ வருத்தமுற்ற வுள்ளத்தோடு கொண்ட பலவாகிய கவலையும் நீங்க விரைவில் வருவர் காண்;
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. - பொய்கையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 18. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, தோழி, வருவர், சங்க, எட்டுத்தொகை